இந்த வாரம்

முகப்பு
குழந்தைகள்
கலைக்கூடம்
இலக்கியம்
நிகழ்வுகள்
அரசியல்
அறிவியல்
துணுக்குகள்
சுற்றுலா
மெய்பேணல்
பொருளாதாரம்
விளையாட்டு
செய்தி விமர்சனம்
நிர்வாகம்
அசைபடங்கள்
மொழி
வாழ்க்கை
சமூகம்
இணையம்
சுஜாதா கதையும், அவலச் சுவை அரசியலும் Print E-mail
அசுரன்   

 

சுஜாதா கதை குறித்து தமிழ்மணத்தில் விவாதம் நடந்தேறி வருகிறது.

முதல் விசயம் சுஜாதா தனது சாதி வெறியை மிக அப்பட்டமாகவே ஆணந்த விகடனில் பிராமண சங்க விழாவுக்கு பிற்பாடு அறிவித்தார். இந்த கதையும் கூட பெரியார் சிலை விவகாரத்தை ஒட்டி வருகிறது என்ற அம்சத்தில் மிகத் தெளிவாக பார்ப்பனியம் அவலச் சுவை நிரம்ப தன்னை வெளிக்காட்டி ஆதிக்கத்தை நிலைநாட்ட எத்தனிக்கிறது என்பதாகத்தான் முடிவு செய்ய வேண்டியுள்ளது.

சிலர் இந்த கதையில் சாதி வெறி இல்லை என்று உண்ர்வதாக தெரிகிறது. அவர்களுக்கு இந்த கதையின் அரசியலை சொல்லுவது சரியாக இருக்கும் என்று கருதுகிறேன்.

அதற்கு முன்பு பார்ப்பன சங்க விழாவில் இதே சுஜாதா பார்ப்பன சாதி கஸ்டப்படுவதாகவும் அது ஒற்றுமையுடன் தனது உரிமைக்காக போராட வேண்டும் என்றும் கூறியதை மனதில் கொள்க. இந்த கதை அந்த கோரிக்கைக்கு அவர் நியாயமாக நடந்து கொள்வதை குறிக்கிறது.

இந்த கதையைப் பொறுத்த வரை, பார்ப்பன சாதி வெறியை பெரியார் சிலை உடைப்பு எதிர்வினை சம்பவங்களின் மூலம் புனிதப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார் சுஜாதா. இதன் மூலம் ஏற்கனவே சமூகத்தில் நடுத்தர வர்க்கத்திடம் நிலவும் பார்ப்னியப் பண்பாடு உயர்ந்தது என்ற மனநிலையை தனது அரசியலுக்கு சாதகமாக அறுவடை செய்வது. இதற்கு ஏற்கனவே பார்ப்பன சாதி மிக கஸ்டப்படுகிறது என்ற ஒரு கருத்தை ஊடகங்கள் மூலம் பெருக்கிக் காட்டியுள்ள பொதுக் கருத்தை துணைக்கு அழைத்துக் கொள்கிறார்.

இவை எப்படி கதையில் வருகிறது? பாலபாரதி தளத்தில் எதிர்வினை செய்தவர்களில் பெரும்பாலோரின் கருத்துக்களிலிருந்து இந்த கதையை போஸ்ட்மார்டம் செய்தால்தான் விசயங்களை புரிய வைக்க முடியும் என்று கருதுகிறேன்.

#1) வயதான அந்த பார்ப்பன தாத்தா ஒரு காலத்தில் அதிகாரத்தில் இருந்து இன்று வலிமையிழந்ததாக பார்ப்னியத்தை காட்ட பயன்படும் உருவகம். இது பார்ப்பனியத்தின் இன்றைய அரசியல் ஆயுதமாகிய அவலச் சுவைக்கு ஏற்ற பாத்திரப் படைப்பு. சுஜாதா முதிர்ந்த எழுத்தாளர்தான்.

#2) கலைச்செல்வி பாத்திரம் ஆதிக்கத்தில் இருக்கும் பிற்படுத்தப்பட்ட சாதியைக் காட்டுகிறது. இதுவும் பார்ப்பனிய அரசியல் நிலைப்பாடுதான். அதாவது தாழ்த்தப்பட்டவர்களை ஒரு பக்கம் சுரண்டினாலும் இன்னொரு பக்கம் நல்ல வசதியுடனும் உள்ளனர் பிற்படுத்தபட்டவர்கள் என்ற பார்ப்பனிய அரசியல். ஆக, நல்ல நிலையில் உள்ள பிற்ப்படுத்தப்பட்ட சாதியைச் சேர்ந்த ஒருவர் இங்கு பார்ப்பனியத்துக்கு கை கொடுக்கிறார். பார்ப்பனியமும் வேறு வழியின்றி அவருடன் சேர்கிறது. இதுதான் மேசேஜ். இதைத்தான் இங்கு தமிழ்மணத்தில் நேரடியாக சொல்லி விவாதம் செய்ய வழியின்றி வெறுத்து போயுள்ளனர் பலர். அவர்கள் இந்த கதையை பயன்படுத்தலாம்.

#3) பெரியார் சிலை உடைப்பு அரசியலை இந்த இந்துத்துவ நிலைப்பாட்டுக்கு வலுக் கொடுக்கும் உணர்வுத்தளமாக பயன்படுத்திக் கொண்டு நடுத்தர வர்க்கத்தின் மனதை அள்ளிக் கொள்ள முயன்றுள்ளார். கதையில் 'அடி வாங்க முடியல' என்ற வரிகள்தான் அவர் சொல்ல வரும் மிக முக்கியமான அரசியல் மெசேஜ். பெரியார் சிலை உடைப்பு சம்பவங்களின் டிராமாட்டிக்கலான உணர்வு நிலையை, பார்ப்ப்னியம் ஏதோ இங்கு திரும்பத் திரும்ப அடிவாங்கி கொண்டிருப்பதாக அர்த்தம் வரும் வகையில் காட்டுகிறார். உண்மை என்னவெனில் பார்ப்பனியம் தமிழகத்தில் பெரிதாக ஒன்றும் அடிவாங்கி விடவில்லை. தமிழில் பூசை செய்யக் கூட போலிசிடம் அடிவாங்கி ஓட வேண்டிய நிலைதான் உள்ளது. இந்த உண்மையை அந்த பெரியவரின் வயதான தோற்றம் மறைக்கிறது.

#4) பார்ப்பனிய சடங்குகளை அந்த பெரியவர் அமெரிக்காவில் செய்ய விரும்புவதும். அதற்கு இங்கு அடிவாங்க முடியவில்லை என்று சொல்லுவதை. அமெரிக்காவில் அதற்கு மரியாதை இருக்கு இங்கு முடியல..... நம்ம காலம் முடிஞ்சிருச்சு என்று சொல்வதாக எடுத்துக் கொள்ளலாம் அல்லவா? இன்னும் சிறப்பாக சொன்னால் கலி முத்திடிச்சு.... என்று கொள்ளலாம்.

கதையிலேயே ஒழிந்துள்ள உண்மைகள் என்னவாக உள்ளது:
இந்த கதை IT துறையில் ஏற்ப்பட்டுள்ள வளர்ச்சியை ஒட்டு மொத்த சமூகத்தின் வளர்ச்சியாக கருதும் நடுத்தர வர்க்க மனோபாவத்தையே தனக்கும் பயன்படுத்திக் கொள்கிறது. அப்படியெனில் அந்த துறையில் இந்த பார்ப்பினியத்தின் நிலை என்ன என்று பார்ப்போம். இந்த விசயத்தை கொஞ்சம் கதைக்கு வெளியே போய் பார்த்து விட்டு கதைக்குள் மீண்டும் வந்தால் கதைக்குள்ளேயே சுஜாதா மறைத்துள்ள விசயங்கள் தெரியவரும்.
இன்று IT துறை சார்ந்தவை மட்டுமே வேலை வாய்ப்பை தருகின்றன. இங்கு இடஓதுக்கீடு என்பது செல்லாகாசாகி விட்டதை கவனிக்கவும். இந்த IT துறையிலும் தமிழர்களைத் தவிர்த்து இந்தியாவின் மீதி எல்லா பகுதியை சேர்ந்தவர்களிடத்திலும் பார்ப்பனிய/உயர் சாதியைச் சேர்ந்தவர்களே அதிகமாக வேலையில் உள்ளனர்.

IT துறையில் இந்த சாதவீத கணக்கு 5% கம்மியாக கிராமப்புறம்(கிராமப்புறத்திலிருந்து பார்ப்பனர்கள் வெளியேறி பல பத்து வருடங்கள் ஆகிவிட்டது).

3% சதவீதத்திற்கும் கம்மியாக தாழ்த்தப்பட்டவர்கள் உள்ளனர். உயர்சாதியைச் சேர்ந்தவர்கள்தான் மிகப் பெரும்பான்மையாக உள்ளனர் IT துறையில் உள்ளனர்.
இன்னும் சொன்னால் வட இந்தியா என்று நாம் பார்க்கும் எல்லாமே வட இந்திய உயர் சாதிதான். உண்மையான வட இந்தியா தென் இந்தியாவைப் போல பல மடங்கு பின் தங்கித்தான் உள்ளது.

இந்த விகிதாச்சாரம் தமிழகத்தை சேர்ந்தவர்களிடம் மாறுபடும். காரணம் இங்கு ஒப்பீட்டளவில் சமூக நீதி நடைமுறைப்படுத்தப்பட்டதும், நகர்மயமாக்கம் அல்லது முதலாளீத்துவ உற்பத்தி முறையின் பரந்துபட்ட வளர்ச்சியும்(50 கிமி ஒரு தொழில் நகரம்) இருப்பதும். இதனாலேயே தமிழகத்திலிருந்து இந்த சாதிப் பிரிவு பிரதிநிதித்துவம் மங்கலாகவே உள்ளது. ஆயினும் இதன் அர்த்தம் ஆதிக்க சாதிகள் ஆதிக்கத்தில் இல்லை என்பதல்ல. மாறாக அது மற்ற பகுதிகளை விட இங்கு கம்மி என்பதே ஆகும்.

சுஜாதா உருவகப்படுத்தும் பார்ப்பன சாதியின் அவலத்தில் வசதியாக அதே  சாதியின் பிரதிநிதியாக அய்யர் பாஷை பேசிண்டிருக்கும் அம்பி கிரிஷ் மறைக்கப்படுகிறான். இங்கு பார்ப்பினியம் அவலத்தில் அல்ல மாறாக ஆதிக்கத்தில் உள்ளது என்ற உண்மை மறைக்கப்படுகிறது.

ஆக, பார்ப்பினியம் ஒரு ஆதிக்க தத்துவமாக நிலைத்திருப்பது மறைக்கப்படுகிறது. கதையில் பூணுல் தாயாரிக்கும் வர்ணனை அந்த பண்பாட்டிற்க்கு புனித பிம்பம கட்டுகிறது.  அவன் ஒரு ஆண் என்பதும், இது ஒரு ஆணாதிக்க சமுதாயம் என்பதும் மறைக்கப்படுகிறது. அவன் கலைச் செல்வியிடம் கூட்டிண்டு போவேன் என்று அதட்டலாக சொல்லுமிடம் அமுக்கியே வாசிக்கப்படுகிறது. கலைச் செல்வியின் செவிப்பறையில் விழுந்து அவளை அமைதிப்படுத்தும் அந்த ஆணாதிக்க வரிகள், படிப்பவரின் செவிகளில் விழுவில்லை. அது சுஜாதா கையாண்ட திறமையான வடிவமைப்பு.

இதே கிரிஷ் அந்த பெண்ணை அதட்டி சந்திக்க விடாமலும் செய்யலாம். அந்தப் பெண்ணை கோவி. கண்ணன் தளத்தில் உள்ள கதை போல விவாகரத்தும் செய்யலாம். ஆனால், எங்குமே அந்த பெண்ணிற்கும் அப்பா, அம்மா உண்டே என்ற விசயம் வரக் காணோம். ஏனேனில் இது ஆணாதிக்க சமுதாயம், அதுவும் ஒரு பார்ப்பனிய ஆணாதிக்கத்த சமூகம்.

1) வளர்ந்து வரும் ஒரே துறையிலும் 'அவாள்' ஆதிக்கம்தான் உள்ளது என்ற விசயம், என்ற உண்மை,
2) பார்ப்பனியம் தனக்கான பண்பாட்டு தளத்தை ஏற்கனவே உள்ள புனித பிம்ப கருத்தின் மூலம் வலுப்படுத்தி வருவதை - மிகத் திறமையாக மறைக்கிறது இந்தக் கதை.

சாதி வெறி கிரிஷ்ன் குடும்பத்திற்கு இல்லை என்று காட்ட, 'ஏற்பாடு செய்த திருமணம் தடை பட்ட'தால் கோபம் என்ற சப்பைக் கட்டு.

பார்ப்பன சாதி வெறியை நேரடியாகவே பார்க்க வாய்ப்புள்ள சுஜாதா, தான் பார்த்தேயிராத 'பெட்ரோல் குண்டு போட்ட'வர்களைப் பற்றி வர்ணிக்கிறார். ரௌடிகளை கொண்டு போலி விசாரனை செய்வதை சொல்லும் சுஜாதா அது உண்மையா இல்லையா என்ற பரிசீலனைக்குக் கூட அவசியமில்லாமல் செய்து பார்ப்பனிய எதிர்ப்பாளர்களின் மீது சாணியடிக்கிறார். சுஜாதா எதைச் சொல்கிறார், எதை மறைக்கிறார் என்று காட்டுவதன் மூலம் அந்த கதையின் அரசியலை இங்கு முன்னிறுத்துகிறேன்.

இது தவிர்த்து சுஜாதா ஏன் இதே போன்று பல்வேறு அரசியல் பிரச்சனைகளுக்கு கதை எழுதியதில்லை என்று கேள்வி எழுகிறது.

ஹோண்டா தொழிலாளர் அடிவாங்கியது, குஜராத் கலவரம், சிதம்பரம் கோயில் பிரச்சனை, கருவறை நுழைவு மறுப்பது, சங்கராச்சாரி, தமிழிசை இப்படி எண்ணற்ற விசயங்களில் தூண்டப்படாத சுஜாதாவின் கலை மனது, அயோத்தி மண்டபம் மண்டையொடைப்பில் தூண்டப்பட்டது எனில் அவரது ஆழ்மன அரசியல் என்ன என்ற கேள்வி எழுகிறது.
அவர் வெறுமனே கணேஷ் வசந்த என்று எழுதிக் கொண்டிருந்தால் நாமும் இதை வலுவாக கேட்கப் போவதில்லை. ஆனால் சில சம்பவங்களில் மட்டும அரசியல் செய்வது என்று அவர் எழுத்த் தொடங்கினால், அவரது செலக்டிவ் அம்னீசியாவுக்கு காரணாமான சார்பு நிலையை நாம் கேள்வி எழுப்ப வேண்டியுள்ளது.

ஏனேனில் இது பார்ப்பினியம் அவலச் சுவையுடன் மிகக் கேவலமான தந்திரோபாயங்களுடன் தனது ஆதிக்கத்தை தக்க வைத்துக் கொள்ள போராடும் காலம்.

அசுரன்
Related Article:

 

 
< Prev   Next >

இந்த இதழில்..

தொகுப்பாளரின் மேசையிலிருந்து
ஹிந்து ஆசிரியர் என்.ராமின் பத்திரிக்கையாளர் முகமூடி...
*நட்சத்திரம்* : மொழி ஞாயிறு தேவ நேயப் பாவாணர் !
இந்திய கீரைக்கட்டு (சிறப்புக்கட்டுரை)
ஈழத்துத் தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல்
உள்ளது உள்ளபடி
எனிமி அட் ஹோம் + எலக்சன் அட் ஹோம் ?
ஒரு கணிப்பொறியாளனின் கனவு!!
ஓவியம் ஒன்று
கனவுகளைத் தொலைத்தவள்
கூடைக்குள் தேசம் -01
கூத்தணி ஆட்சி !
கேன்சருடன் ஒரு யுத்தம்
சிங்கப்பூரில் தமிழ் இல்லாத இடம்...
"இலங்கையில் இருக்கிறம்".
பட்டையை கிளப்பும் பாமக அரசியல் பரட்டை அரசியலா?
பரதேசி அரசியல் நடத்தும் பா.ம.க.
பூமி-- 1800 களில்: அமெரிக்க சிவப்பிந்தியத்தலைவரின் பார்வையில்
மென் துறையில் பெண்கள் உப்புக்குச் சப்பாணியா..?
மேமோகிராம்,எஃப்.என்.ஏ.சி.சோதனைகள்
ரஜினியின் வில்லன்கள் சிலரும் காசிமேடு ஆதியும் - எனது பார்வையில்
1996 டிசெம்பர்
வாசகர் எதிர்வினை
*நட்சத்திரம்* : புணரபி மரணம் ! (சிறுகதை)