இந்த வாரம்

முகப்பு
குழந்தைகள்
கலைக்கூடம்
இலக்கியம்
நிகழ்வுகள்
அரசியல்
அறிவியல்
துணுக்குகள்
சுற்றுலா
மெய்பேணல்
பொருளாதாரம்
விளையாட்டு
செய்தி விமர்சனம்
நிர்வாகம்
அசைபடங்கள்
மொழி
வாழ்க்கை
சமூகம்
இணையம்
என் கடன் பணி செய்து கிடப்பதே Print E-mail
இராம.கி   

"தமிழை வளர்க்கத் தமிழை எளிமைப் படுத்துவோம். தம் தாய்மொழியை அனைவரும் எளிதே பயன்படுத்திட அதனை எளிதாய் வைத்திருப்போம். தங்கள் சொல்லாக்கம் தவிர்ப்பீர்! தமிழைக் காப்பீர்!"

என்று எளியன் என்பவர் என்னுடைய முந்தையப் பதிவில் ஒரு பின்னூட்டுக் கொடுத்திருந்தார். அதற்கு,

"தமிழை எளிதாக வைத்திருக்க உங்கள் இலக்கணம் ஏதென்று எனக்குத் தெரியாது. தமிழுக்கு ஏதும் நான் குறை செய்ததாகவும் எனக்குத் தோன்றவில்லை. போகிற போக்கில் இப்படி "பொன்னான" கருத்துச் சொல்லும் உங்களைப் போன்றோருக்கு என்னிடம் மறுமொழி இல்லை. ஏதேனும் தவற்றை விதப்பாகச் சொன்னால் மறுமொழி சொல்லலாம். உங்கள் வருகைக்கு நன்றி"

என்று நான் மறுமொழி சொல்லியிருந்தேன். எளியன் சொல்லும் இலக்கணம் ஏதென்று எனக்குத் தெரியாவிட்டாலும், ஒன்று மட்டும் உறுதியாய்ப் புரிந்து கொள்ளுகிறேன். என்னுடைய பதிவுகளைப் படிக்கும் ஒரு சாராருக்கு நான் பெரும் முள்ளாய் இருந்து கொண்டிருக்கிறேன். ஏனென்றால் எங்கெங்கோ தொடர்பு இல்லாத இடங்களிற் கூட (காட்டாக, கலைஞரின் கையெழுத்து பற்றிய நண்பர் ஹரன் பிரசன்னாவின் பதிவிற்கான பின்னூட்டில்) "மொட்டைத் தாதன் குட்டையில் விழுந்தான்" என்ற கணக்காய், கையெழுத்து மாற்றத்திற்கும் சொற்பெயர்ச்சிகளுக்கும் உறவு சொல்லி, அடிப்படை அறிவு கூட இல்லாமல், என் சொல்லாய்வு முயற்சிகளைப் பற்றி முட்டாள் தனமாக எதிர்வினை செய்கிறவர்கள் இருக்கிறார்கள். (இங்குமே பெயரில்லாதவர்கள்). வலைப்பதிவு நுட்பங்களின் நெளிவு சுளிவுகளால் எளிதாகும் முகமூடி விளையாட்டு, இது போன்ற கோழைப் பின்னூட்டுக்களுக்கு வாய்ப்பாய் அமைந்து விடுகிறது.

தமிழைக் கவிதை, கதை, துணுக்கு, திரைப்படம் என்று நாம் களியாட்டக் களத்தில் வைத்திருக்கும் வரை இந்தப் பெயரில்லாதவர்களுக்கு அது உகந்ததாய் ஆகிறது. கூடிச் சேர்ந்து கும்மியடிக்க முடிகிறது. ஏனென்றால் அந்தக் கும்மாளம் நம்மை அறியாமலேயே "மெல்லத் தமிழ் இனிச் சாகும்" என்ற நிலைக்கு கூட்டிச் செல்கிறது அல்லவா? நாமும் "கொஞ்சம் கொஞ்சமாய் சூடேறும் நீர்த்தாங்கலில் (water tank) அமிழ்ந்து கிடக்கும் தவளையைப் போல" நம் அழிவை உணராமல் "சும்மா கிடப்பதே சொல்க்கம்" என்று இருப்போம் அல்லவா?

மாறாகத் தமிழ்நடையைத் துல்லியப்படுத்தும் வகையில், அறிவியல், நுட்பியல், மாந்தவியல், பொருளியல், குமுகியல் என்று போய், வேர்ச்சொல் ஆய்ந்து, பழஞ் சொற்களைப் புதுக்கி, புதுச் சொற்கள் ஆக்கி, சமய வழி மூதிகக் கதைகளை ஒதுக்கி, வரலாற்றுப் பிழைகளைச் சொல்லி, மாற்றுக் கருத்தியல் வைத்தால் இந்தப் பெயரில்லாதவர்களுக்கு இருப்புக் கொள்ளாமற் போய்விடுகிறது. சுற்றிச் சுற்றி வந்து நாலாந்தரமாகப் பெயரை நாறடிக்க முற்படுகிறார்கள். (இப்படித்தான் சிற்றம்பலம் நடவரசன் திரு முன்னால் திருவாசகம் படிப்பது பற்றி நான் எழுதிய போது, அதைத் தன்மயமாய்த் திரித்து என்னையும், என் குடும்பத்தினரையும் ஒருவர் தூற்றி இருந்தார்.) என்பால் கனிவு கொண்டவர்கள் என்னை அகவை கருதியும், தமிழ் மரபு கருதியும், "அய்யா" என்று அழைப்பது கூட இவர்களுக்கு உறுத்துகிறது.

கழிப்பறைச் சுவரில் விடலைப் பிள்ளைகள் பாலியற் செய்திகளை ஊகமாய் எழுதுவது போல், கண்ட கண்ட இடங்களில் தூற்றி எழுதிக் கொண்டிருக்கும் இவர்களுக்கெல்லாம் மறுமொழி சொல்லிக் கொண்டிருக்கத் தேவையில்லை தான். ஆனாலும் தமிழுக்கு "என் கடன் பணி செய்து கிடப்பதே" என்று பொதுப்படச் சொல்லுவதற்காக இந்தப் பதிவு.

"போற்றுபவர் போற்றட்டும்; புழுதி வாரித்
தூற்றுபவர் தூற்றட்டும்; தொடர்ந்து செல்வேன்;
ஏற்றதொரு கருத்தை எனதுள்ளம் என்றால்
எடுத்துரைப்பேன்; எவர்வரினும் நில்லேன்; அஞ்சேன்."

என்றான் கண்ணதாசன்.

அன்புடன்,
இராம.கி.

http://valavu.blogspot.com/2007/02/blog-post.html

 
< Prev   Next >

இந்த இதழில்..

தொகுப்பாளரின் மேசையிலிருந்து
ஹிந்து ஆசிரியர் என்.ராமின் பத்திரிக்கையாளர் முகமூடி...
*நட்சத்திரம்* : மொழி ஞாயிறு தேவ நேயப் பாவாணர் !
இந்திய கீரைக்கட்டு (சிறப்புக்கட்டுரை)
ஈழத்துத் தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல்
உள்ளது உள்ளபடி
எனிமி அட் ஹோம் + எலக்சன் அட் ஹோம் ?
ஒரு கணிப்பொறியாளனின் கனவு!!
ஓவியம் ஒன்று
கனவுகளைத் தொலைத்தவள்
கூடைக்குள் தேசம் -01
கூத்தணி ஆட்சி !
கேன்சருடன் ஒரு யுத்தம்
சிங்கப்பூரில் தமிழ் இல்லாத இடம்...
"இலங்கையில் இருக்கிறம்".
பட்டையை கிளப்பும் பாமக அரசியல் பரட்டை அரசியலா?
பரதேசி அரசியல் நடத்தும் பா.ம.க.
பூமி-- 1800 களில்: அமெரிக்க சிவப்பிந்தியத்தலைவரின் பார்வையில்
மென் துறையில் பெண்கள் உப்புக்குச் சப்பாணியா..?
மேமோகிராம்,எஃப்.என்.ஏ.சி.சோதனைகள்
ரஜினியின் வில்லன்கள் சிலரும் காசிமேடு ஆதியும் - எனது பார்வையில்
1996 டிசெம்பர்
வாசகர் எதிர்வினை
*நட்சத்திரம்* : புணரபி மரணம் ! (சிறுகதை)