|
சிறப்பு ஒலிப்பேழை - இசைத்தமிழ். பகுதி-2 |
|
|
|
முனைவர் திருமுருகன்
|
இந்த வார சிறப்பு ஒலிப்பேழையில் இசைத் தமிழ் பற்றிய பதிவின் இரண்டாம் பாகம் ஒலிப்பரப்பாகிறது.இந்தப் பகுதியில் முனைவர் திருமுருகன் அவர்கள் எவ்வாறு தமிழ்ப்பண்கள், இராகங்களாக்கப்பட்டன, தாளங்களின் பெயர்கள் மொழி மாற்றப்பட்டன என்று விவரித்து இப்படியான மொழி மாற்றத்தைச் செய்தற்கான பின்னணி என்ன என்று விவரிக்கிறார். மனதில் பதிந்த எடுத்துக்காட்டு, 4 ஆம் நூற்றாண்டு காரைக்கால் அம்மையாரும், 7ஆம் நூற்றாண்டு ஞானசம்பந்தரும் (தோடுடைய செவியன்..) தமிழ் பாடிய நட்டபாடை என்ற பண் இன்றும் கச்சேரிகளில் கம்பீர நாட்டை என்ற இராகத்தில் பாடப்படுகிறது. இப்படியான பெயர் மாற்றம் செய்ததால் விளைந்தது என்ன?
3 ம் நூற்றாண்டில் பாடப்பட்ட தமிழிசை கர்நாடக சங்கீதமாக பெயர்மாற்றப்பட்ட போது அதற்கு 13ம் நூற்றாண்டில் சாரங்க தேவரால் எழுதப்பட்ட சங்கீத இரத்னாஹாரம் என்ற நூல் தான் அடிப்படை என்றும், தியாகராஜரை சங்கீத மும்மூர்த்திகளில் ஒருவர் என்றும் போலியாக உரிமை கொண்டாட முடிகிறது. இதை தமிழர்களில் பெரும்பாலானோர் கூட நம்புவதும் நிகழ்கிறது.
இப்படியாக தமிழிசையின் கூறுகளையும், அதன் மாற்றங்களையும் அழகாகப் பாடல்களின் மூலம் விளக்குகிறார் முனைவர் திருமுருகன். இந்நிகழ்ச்சியைப் பற்றிய உங்கள் கருத்துக்களை பூங்காவுக்கோ அல்லது முனைவர் இரா. திருமுருகன் அவர்களுக்கோ தெரிவிக்கலாம்.
முனைவர் இரா. திருமுருகன்
"ஏழிசைச் சூழல்"
62 மறைமலயடிகள் சாலை
புதுச்சேரி - 605 001
இந்தியா
தொலைபேசி: 0413 2201191
|