தமிழ்மணமும் திருவிழாக்கூட்டமும்!
கிராமங்களில் நடக்கும் திருவிழாக்களின் முதல்
சிறப்பு அம்சம் அங்கே வந்து சேரும் பலவிதமான
மக்கள் கூட்டம்தான்.
அதோடு அந்தக்கூட்டத்தை நம்பி டென்ட் அடித்துக்
கடைவிரிக்கும் வியாபாரிகளும், ஜவ்வு மிட்டாய், பலூன்
போன்ற சில்லுண்டிச் சாமான்களை விற்கும் (நடை)
ராஜாக்களும், குடைராட்டிணம், ராட்சச சுழலும் சக்கரம்
இத்யாதி போன்ற குழந்தைகளைக் கவரும் வித்தைக்
காரர்களும் அங்கே கூடுவது கூடுதல் சிறப்பு.
ஒரே கலகலப்பாக இருக்கும்!
தமிழ்மணமும் அப்படித்தான் தினமும் திருவிழா
நடக்கும் இடமாகி விட்டது.
சனிக்கிழமை, ஞாயிற்றுக்கிழமை மற்றும் விடுமுறை
நாட்களில் கூட்டம் சற்றுக் குறைவாக இருக்கும்
அவ்வளவுதான். மற்றபடி வருடம் 365 நாட்களுமே
திருவிழாதான்
கலகலப்பிற்கும், வேடிக்கைகளுக்கும், உற்சாகத்திகும்
உரசல்களுக்கும் என்றும் குறைவில்லை!
இங்கே வந்துபோகும் எண்ணிக்கையற்ற தமிழ்
வாசகர்கள்தான் மக்கள் கூட்டம்..
பதிவர்கள் அத்தனை பேர்களுமே வியாபாரிகள் அல்லது
நடைராஜாக்கள் (இதற்கு விளக்கம் மேலே உள்ளது)
சில பல பதிவர்களும் வாரத்தில் மூன்று அல்லது நான்கு
நாட்கள் பதிந்து விட்டு மற்ற நாட்களில் அவர்களும்
பொதுமக்களுடன் மக்களாக விழாவில் கலந்து கொள்ள
வருவார்கள்!
Monetary Benefit' என்ற ஒன்று துளிக்கூட இல்லாவிட்டாலும்
தங்கள் பதிவுகளின் மூலம் தங்கள் எண்ணங்களையும்,
கருத்துக்களையும், திறமையான எழுத்தாற்றல்களையும்
இலவசமாகக்கொடுத்து ஒன்று பெயர் வாங்க அல்லது
மனத்திருப்திகொள்ள வருபவர்கள் அவர்கள்!
நான் இந்தத் திருவிழாவிற்குள் 23.12.2005 அன்று காலெடி
எடுத்து வைத்தபோது இருந்த ராஜாக்களின் எண்ணிக்கை
800க்கும் குறைவு . இந்தப் பதினைந்து மாத காலத்தில்
அந்த எண்ணிக்கை 1,800 ஆக உயர்ந்திருக்கிறது.
அதுபோல மக்கள் கூட்டமும் அதிகரித்திருக்கிறது.
சரி இவ்வளவு கூட்டத்தையும் தாங்கும் அளவிற்குத் தமிழ்
மணத்தின் கட்டமைப்பு மற்றும் அடிப்படை வசதி
மேம்பட்டிருக்கிறதா என்றால் மேம்பட்டிருக்கிறது.
ஆனாலும் இன்னும் சற்று அதிகப்படியான வசதிகள்
செய்து தரப்பட வேண்டும் என்பது எனது வேண்டுகோள்!
மக்கள் கூட்டம் அதிகரிக்க அதிகரிகத்தான் திருவிழா
சிறப்பாக இருக்கும். அதனால் அதை வரவேற்போம்.
ஆனால் ராஜாக்களுக்கும் உரிய வசதிகள செய்து தரப்பட
வேண்டும்!
சரி இங்கே தினமும் வந்து கடைவிரிக்கும் ராஜாக்களின்
எண்ணிக்கையையும், அவர்கள் கொண்டுவரும் பதிவுகளின்
வகைகளையும் கீழ்க்கண்ட அட்டவனைகள் மூலமாகப்
பார்ப்போம்.
இதற்காக நான் எடுத்துக் கோண்டது 15.3.2007 முதல் 22.3.2007
வரை வந்த பதிவுகள் . அவைகள் மொத்தம் 1028 (7 நாட்களில்)
சராசரியாகத் தினமும் 150 பதிவுகள் வருகின்றன!
==================================================
எண்ணிக்கை வரிசையில் பதிவு வகைகளின் பிரிவுகள்
=========================================================
தமிழ்மணத்தில் வகைப்படுத்தப்பட்டுள்ள வரிசையில் பிரிவுகள்
============================================================
சதவிகித அடிப்படையில் பிரிவுகள்
=======================================================
இந்த அட்டவணைகளின் நோக்கம் எந்தப் பிரிவில்
எத்தனை பதிவுகள் இடப்படுகின்றன. நெருக்கடி எங்கே
அதிகமாக உள்ளது என்று தெரிந்து கொள்வதற்காகத்தான்!
==================================================
முகப்பில் அண்மையில் எழுதப்பெற்றவை என்னும்
இடத்திற்குக் கீழே இடம் பெறும் பதிவுகள்தான் அதிகம்
பேர்களின் கவனத்தை ஈர்க்கக் கூடியவை!! படிக்கும் வாய்ப்பை அதிகமாகப் பெறுபவை!
சுமார் 20 அல்லது 22 பதிவுகளுக்குத்தான் அந்த வாய்ப்பு
அதுவும் மூன்று முதல் நான்கு மணி நேரம்வரைதான்
பதிவுகள் அங்கே நிற்கவும் முடியும்!.
சகபதிவர்களும், வாசகர்களும் பல தேசங்களில்
வசிப்பவர்கள் ஆதலால் இரவு, பகல் என்று எந்தப்
பாகுபாடும் இன்றி, அவரவர்கள் வசிக்கும் தேசங்களைப்
பொறுத்து வந்து போகும் நேரமும் மாறுபடுவதால்,
முகப்பை மட்டும் வைத்துப் பதிவுகள் பார்க்கப்பட்டுவிடும்
என்று சொல்வதற்கில்லை!
அதேபோல கடந்த 24 மணி நேரத்தில் எழுதப்பட்ட
இடுகைகள் என்ற பக்கத்தில் உள்ள 16 பிரிவுகளில்
பதிவுகளைக் காண முடிகிறது.
ஆனாலும் அங்கேயும் இட நெருக்கடி.
பல பிரிவிகளில், கடைசியாக வந்த 5 இடுகைகள் மட்டுமே
பதிவரின் பெயர், பதிவின் தலைப்பு, பதிவின் Pofile படம்,
மற்றும் பதிவின் ஆரம்ப வரிகள் என்று அசத்தலாகக்
கண்ணில் பட்டு கவனத்தை ஈர்க்கும் விதமாக இருக்கும்
அதற்கு முன் வந்தைவைகள் எல்லாம் நெருக்கடிபட்டு
சடடை கசங்கி, தலை கலைந்து காணப்படும்! உற்றுப்
பார்த்தால்தான் அவைகள் கண்ணுக்குத் தெரியும்
அந்தப் பக்கத்தில் அனைத்துப் பதிவுகளூமே நாள்
முழுவதும் பொலிவோடு தெரிவதற்கு வகை செய்யப்பட
வேண்டும். இந்தப் பதிவின் நோக்கமும் அதுதான்!
நான் குறிப்பிட்டுள்ள அந்த இரண்டு பக்கங்களின் அளவை
அல்லது எண்ணிக்கையை அதிகப்படுத்த வேண்டும்!
அதுதான் ஒரு நல்ல தீர்வு!
தமிழ்மணம் நிர்வாகத்தினர் இதைச் செய்வார்களா?
நாம் அனைவரும் ஏகமனதாக எடுத்துரைத்தால்
செய்யமாட்டார்களா என்ன?
உங்கள் மேலான கருத்து என்ன?
பின்னூட்டத்தில் சொல்லுபடி கேட்டுக்கொள்கிறேன்!
http://blogintamil.blogspot.com/2007/03/blog-post_28.html
|