இந்த வாரம்

முகப்பு
குழந்தைகள்
கலைக்கூடம்
இலக்கியம்
நிகழ்வுகள்
அரசியல்
அறிவியல்
துணுக்குகள்
சுற்றுலா
மெய்பேணல்
பொருளாதாரம்
விளையாட்டு
செய்தி விமர்சனம்
நிர்வாகம்
அசைபடங்கள்
மொழி
வாழ்க்கை
சமூகம்
இணையம்
இது தெரியுமா? -பழங்களின் அரசன் Print E-mail
துர்கா & மை ஃபிரண்ட்   

இது பச்சையாக இருக்கும்

முட்கள் நிறைந்தது

இதன் மணம் சிலருக்கு நறுமணம் சிலருக்குத் துர்நாற்றம்.எப்படி பட்ட மணம் என்று இணையத்தில் தேடி பார்த்தேன்.படு கேவலமாக இருந்தது.பூனை முத்திரம்,வாந்தி என்று எல்லாம் எழுதி வைத்திருந்தார்கள்.இப்படி தப்பாக எழுதி வைத்திருப்பவர்களை நம்ப வேண்டாம்.எனக்கு அந்த மணம் அவ்வளவு கேவலமாக இருப்பதாக தெரியவில்லை.பல நாடுகளில் இந்த மணம் மிக பிரபலம்.மலேசியார்களான பலருக்கு இது நறுமணம்தான்.

இது ஒரு பழம்

சாதாரண பழம் இல்லை

இது பழங்களின் அரசன்

எங்கள் ஊர் டுரியான்(durian) பழத்தைப் பற்றிதான் எழுதிக்கொண்டிருக்கின்றேன்.







தென் கிழக்கு ஆசியா நாடுகளில் டுரியான் பழம் மிகப் பிரபலம்.இந்த பழம் சுவையாக இருக்கும் ஆனால் மணம்தான் சற்று ஒரு மாதிரியாக இருக்கும்.டுரியான் பழத்தைப் பற்றி ஒரு நாட்டுபுறக் கதை ஞாபகம் வருகின்றது.

"ஒரு ஊரில் அவலட்சணமான அரசன் இருந்தான்.அவனுக்கு ஒரு அழகான இளவரசி மேல் காதல்.ஆனால் அந்த இளவரசிக்கோ இந்த அரசனைக் கண்டால் பிடிக்காது.ஆகவே இந்த அரசன் ஒரு மந்திரவாதியின் உதவியை நாடினார்.அந்த மந்திரவாதியும் ஒரு விதையைக் கொடுத்து அரண்மனைத் தோட்டத்தில் நட்ட சொன்னார்.அந்த விதையில் இருந்து காய்க்கும் பழத்தை இளவரசி உண்டால் காதல் வரும் என்றார்.அப்படி இளவரசி அரசனை மணந்தால் அவர்களின் திருமண விருந்திற்கு மந்திரவாதியையும் அழைக்க வேண்டும் இதுதான் மந்திரவாதிக்கு அரசன் செய்ய வேண்டிய கைமாறு.விதை ஒரே நாளில் முளைத்து மரமாகி,காயாகி கனியும் ஆகிவிட்டது.அந்த சுவையான மற்றும் வாசமான பழத்தை உண்ட இளவரசியும் அரசன் மீது காதல் கொண்டு திருமணமும் செய்தாள்.ஆனால் அரசன் மந்திரவாதிக்குக் கொடுத்த வாக்கை மறந்துவிட்டான்.இதனால் சின முற்ற மந்திரவாதி இந்த சுவையான பழம் இனிமேல் நாற்றம் அடிக்கட்டும்,பழத்தின் மேல் இனிமேல் முட்கள் இருக்கும் என்று சாபம் விட்டு விட்டார்.இப்படிதான் அந்த சுவையான பழம் டுரியான் பழமாக மாறியதாம்.(கொடுத்த வார்த்தையைக் காப்பாற்றவில்லை என்றால் பழம் நாறிவிடுமா?)இதுதான் கதை.


(இதைப் படித்து விட்டு யாரவது நீங்கள் காதலிக்கும் பெண்ணிற்கு டுரியான் பழம் வாங்கி கொடுக்க வேண்டாம்.இது மிகவும் ஆபத்தான வேலை.பழத்தின் மணம் பிடிக்கமால் அந்த பழத்தால் அடி வாங்கினால் உடம்பு தாங்காது.பழங்களின் முட்கள் சற்றே கூர்மையானவை.)

அடுத்தது டுரியான் பற்றி தெரிந்துக் கொள்ளலாம்.

இது ஒரு குறிப்பிட்ட பருவ காலத்தில் மட்டுமே கிடைக்கும்(மே முதல் ஜுலை மாதம் வரை).

பழத்தின் வெளிதோற்றத்தை நீங்கள் படத்திலேயே காணலாம்.வெளியே நிறைய முட்கள் இருக்கும்.உள்ளே மஞ்சள் நிற சுளைகள் இருக்கும்.பழத்தின் சுவையே தனி.தித்திப்பாக நாக்கில் அப்படியே பழம் கரையும்.எனக்கு இப்பொழுதே சாப்பிட ஆசையாக இருக்கின்றது.பழத்தை அப்படியே கொட்டையோடு வாயில் போட வேண்டாம்.மாட்டிக் கொண்டால் வீண் வம்பு.(அனுபவத்தில் சொல்கின்றேன்.என் பேச்சை கேளுங்கள்)

டுரியான் பழத்தின் தரம் மூன்று கூறுகளால் நிர்மாணியம் செய்யபடுக்கின்றது
•வெளிதோற்றம்(நிறம்)
• மணம்
• படிவ அமைப்பு(texture)


டுரியான் பழத்தை வாங்குவதும் ஒரு கலைதான்.நல்ல பழத்தை தேர்ந்து எடுக்க பல குறிப்புகள் இருக்கின்றன.பலரிடம் கேட்டு தெரிந்துக் கொண்டவைகளை இங்கே பகிர்ந்துக் கொள்கின்றேன்.
பழம் அதிக கனமாக இல்லமால் இருக்க வேண்டும்
• பழத்தின் தண்டுகள் பெரிதாகவும் கடினமாகவும் இருக்க வேண்டும்
• பழம் பழுத்துவிட்டதா என்பதை அதன் மணத்தை வைத்துதான் சொல்வார்கள்
• பழத்தை ஆட்டிப் பார்கும் பொழுது சத்தம் கேட்க வேண்டும்.
• ஒரு கத்தியை உள்ளே சொருகினால் பழம் அதில் ஒட்டி இருக்க வேண்டும்.இல்லையென்றால் பழம் பழுக்கவில்லை என்று நீங்கள் தெரிந்துக் கொள்ளலாம்
• பழத்தில் எந்த ஒரு ஓட்டைகளும் இருக்க கூடாது.அப்படி இருந்தால் உள்ளே புழுக்கள் இருக்க வாய்ப்பு உண்டு

அடுத்த முறை எங்கள் ஊர் பக்கம் வந்தால் இந்த பழத்தை எப்படி வாங்குவது என்று சந்தேகம் எல்லாம் உங்களுக்கு வந்தால் இதை ஞாபகம் வைத்துக் கொள்ளவும்.பழத்தை வெட்டுவதற்கும் ஒரு தனி வழிமுறை இருக்கின்றது.உங்களுக்கு அந்த கஷ்டம் எல்லாம் வேண்டாம்.வாங்கும் இடத்திலேயெ வெட்டி கொடுத்து விடுவார்கள்.

இந்த பழம் வேறும் பழமாக மட்டும் உட்கொள்ள படுவதில்லை.கேக்,ரொட்டி,Jam,ஐஸ் கீரிம் என்று பல உணவுகள் டுரியானைக் கொண்டு தயாரிக்கப் படுகின்றன.ஒரு சில உணவுகள் கிழே கொடுக்கப்பட்டுள்ள சுட்டியில் நீங்கள் பார்க்கலாம்.
http://www.durianpalace.com/gourmet.htm

பழங்களின் அரசன் டுரியான்.அப்பொழுது அரசி எந்த பழம்?இந்த கேள்விக்குப் பதில் அடுத்த முறை எழுதுகின்றேன்.இல்லை நீங்களே கண்டிப்பிடித்துக் கொள்ளுங்கள் :-)

 

 

 

டுரியானை சந்தோஷமாக தூக்கி செல்லும் ஓர் இளைஞர்

பழங்களின் அரசனின் அலைகள் இன்னும் ஓயவில்லை. டுரியான் பழத்தை துர்கா சென்ற வாரம் உங்களுக்கு அறிமுகப் படுத்தினார். பின்னூட்ட கேள்விகள் மழையாக கொட்டியிருப்பதை பார்த்தவுடன் இன்னொரு பதிவு இந்த அரசனுக்கு அளிக்க வேண்டும் என்று தோன்றியது.


இதோ உங்கள் கேள்விகளின் பதில்கள்:

விருபா: நீங்கள் டுரியான் பழத்தை அரசன் என்கிறீர்கள், அண்மையில் மலேசியாவிற்கு வந்திருந்த போது தங்கியிருந்த விடுதியில் டுரியான் பழத்தை உள்ளே எடுத்து வந்தால் 200 ரிங்கிட்ம் என்று அறிவிப்பு வைத்திருந்தார்கள்.

டுரியான் அரசன்தான். ஆனால், இவன் தெற்கிழக்காசியாவின் அரசன். தெற்கிழக்காசியாவின் (தாய்லாந்து, மலேசியா, சிங்கப்பூர் மற்றும் இந்தோனிசியா) தற்பவெப்பங்களுக்கு ஏற்ற ட்ரோப்பிக்கல் (Tropical) என்றழைக்கப்படும் இடங்களில் மட்டுமே இந்த மரம் வளரும். இந்த மரம் வளர்ப்பது மிக சுலபம். பழத்தின் சுலைகளை உண்டப் பின் அதில் மீதமிருக்கும் கொட்டையை நீங்கள் மண்ணில் புதைத்து தண்ணீர் ஊற்றினால்(ஊற்றாவிட்டாலும் சொந்தமாகவே வளரும்) மிக சாதாரணமாக வளரும். மற்ற செடி கொடிகளுக்கு கொடுக்க வேண்டிய கவனங்கள் இந்த மரத்துக்கு தர தேவையில்லை. மரம் வளர்ந்ததும் (40 மீட்டர் வரை) அந்த பருவக் கலத்தில் (மே முதல் ஜூலை வரை) மரத்தில் டுரியான் பூத்துக் குளுங்கும்.

டுரியான் பழமும், சாப்பிட்ட பின் மீதமிருக்கும் கொட்டையும்

மரத்தில் தொங்கிக் கொண்டிருக்கும் டுரியான். என்னேரமும் கீழே விழலாம். விழுந்ததும் பழத்தை வெட்டி சுவக்கலாம்.


ஆனால், மற்ற பழங்களை பறிப்பதுபோல் இந்த பழத்தை நாம் பறிக்க முடியாது. இந்த பழம் நம் கையில் கிடைக்க நாம்தான் காத்திருக்க வேண்டும். பழங்கள் தானாகவே மரத்திலிருந்து கீழே விழும். அதைதான் நாம் பொருக்க வேண்டும். (இங்கே உங்களுக்கு ஒரு சின்ன டிப்ஸ்: பழத்தை பொருக்க செல்லும்போது தலைகவசத்தை (நம்ம நாட்டாமை ஓர்குட்ல அணிந்திருக்கிற மாதிரி) அணிந்து செல்லுங்க. டுரியான் பழம் உங்கள் தலையில் விழுந்தால் உங்கள் உயிர் அதோ கதிதான்).

டுரியானுக்கு ஒரு தனி மணம் இருக்கிறது. அது கண்டிப்பாக துர்நாற்றம் இல்லை. நீங்கள் அணியும் வாசனை திரவியம் எந்த் அளவுக்கு ஸ்ட்ராங்கா இருக்கோ, அந்த அளவுக்கு டுரியானின் மணமும் ஸ்ட்ராங்தான். ஒரு சிலருக்கு எந்த ஒரு மணமும் கொஞ்சம் பலமாக இருந்தால் அவர்களுக்கு ஒத்துக் கொள்ளாது. அதான் பொது இடங்களில் (குறிப்பாக குளிர்சாதனம் பொருந்திய இடங்களில்) இப்பழத்தை கொண்டு செல்வதுக்கு தடா விதிக்கப்பட்டிருக்கிறது. டுரியானை ருசித்து நாம் இன்புறும் நேரத்தில் மற்றவர் இதனால் துன்புற கூடாது என்ற ஒரு நல்லெண்ணத்தில்தான் இந்த தடா விதிக்கப்ப்ட்டிருக்கிறது.

டுரியான், சுலைகள் அடங்கியிருக்கும் ஒரு சின்ன அறை, டுரியான் சுலை


விருபா: அதேவேளை ஓரிடத்தில் நடைபாதை பழவியாபாரியிடம் சில ஐரோப்பியர்கள் இதனை விருப்பத்துடன் வாங்கிக் கொண்டிருந்ததையும் பார்க்கக்கூடியதாக இருந்தது.

விருபா, நீங்கள் சொன்னது சரியே! பழத்தின் ருசியை பற்றி கேட்டால், என் பதில் "ஆஹா.. அருமை அருமை!". இதனின் ருசியை எனக்கு விளக்க தெரியவில்லை. வேறேதாவது பழங்களின் ருசி ஏறக்குறைய இப்படி இருந்தாலாவது நான் உங்களிடம் விளக்கலாம். ஆனால், அப்படிப்பட்ட பழங்கள் வேறெதுவுமில்லை. அதனால், டுரியானின் ருசியை அறிய நீங்கள் டுரியானை சாப்பிட்டால் மட்டுமே உணர முடியும்.

டுரியானை பல வகையாக பிரித்து வைத்திருக்கிறார்கள். பிரபலமான சில டுரியான்கள் D24, D99, D158 மற்றும் D159. இதில் D24 வகை டுரியானின் ருசியே அற்புதம். நீங்களும் இவ்வகை டுரியானை கேட்டு வாங்கி ருசித்து பாருங்கள். மே மாதம் டுரியான்களை நீங்கள் மலேசியாவில் எல்லா இடத்திலும் விற்க்கப்படுவதை பார்க்கலாம்.

டுரியானில் உள்ளே உள்ள சுலை. மஞ்சள் நிறமாக இருக்கும் இப்பழத்தின் ருசியை வர்ணிக்க வார்த்தயே இல்லை. ;-)


தேவ்: இந்தப் பழம் எங்க தமிழ்நாட்டுக்கு ஏற்றுமதியாகுதான்னு விசாரிச்சுச் சொல்ல முடியுமா?

தேவ், டுரியான் பழங்கள் ஏற்றுமதி செய்யப்படுவதில்லை. ஆனால், இந்தியாவில் டுரியான் மரம் நட ஆராய்ச்சிகள் நடந்து வருவதாக நான் கேள்விப்பட்டிருக்கிறேன். அந்த ஆராய்ச்சி வெற்றிப்பெற்றிருந்தால், இன்னேரம் உங்கள் ஊரிலும் டுரியான் மரங்களும் பழங்களும் கிடைக்க வாய்ப்பிருக்கிறது. டுரியான்கள் ஏற்றுமதி செய்யப்படாததுக்கு ஒரே காரணம் அதனின் அளவுக்கு அதிகமான மணம்தான். ஆனால், டுரியான்களை பதனம் செய்யப்பட்டு டின்களில் அடைக்கப் பட்டு ஐரோப்பிய நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகின்றன. மலேசியாவின் உணவுப் பொருட்களின் ஏற்றுமதியில் டுரியானும் ஒரு முக்கிய பங்கு வகிக்கிறது.

டுரியானை அறை அறையாக பிரித்து சாப்பிட தெரியாதவர்கள் இப்படி பேக்கிங் செய்து விற்க்கப்படும் டுரியான்களை சுவைக்கலாம்.


பலர்: டுரியான்=ப்லா பழம்???

பலர்: டுரியான்=ப்லா பழம்???
இதன் தோற்றத்தை பார்ப்பதற்கும் நீங்கள் சொல்வதையும் வைத்து பார்க்கும் பொழ்து இது தமிழ் நாட்டில் கிடைக்கும் பலா பழம் போல் அல்லவா தெரிகின்றது?..

இது ஒரு நல்ல கேள்வி! :-)
டுரியான் பலாப்பழம் இல்லை.

பலாப்பழத்தை பற்றி நான் உங்களுக்கு சொல்ல தேவையில்லை உங்களுக்கு ஏற்கனவே தெரிந்திருக்கும். நான் டுரியானை பற்றியே சொல்கிறேன். கேளுங்கள்.

டுரியானின் வெளிப்புறம் பச்சை நிறம். பலாப்பழமும் பச்சை நிறம்தான். ஆனால், டுரியானின் வெளிப்புறத்தில் உள்ள முட்கள் மிக கூர்மையானவை. பலாப்பழத்தின் வெளிப்புறத்தில் இருக்கும் முட்களோ கூர்மை இழந்து காணப்படும் (குத்தவே குத்தாது). பலா பழம் பெரிதாக இருக்கும் (ஒரு இரண்டு கிழோக்கு மேலே இருக்கும் என நினைக்கிறேன்). டுரியான் பலா பழம் அளவுக்கும் பெரிதாய் இருக்காது. ஆக பெரிய அளவு எவ்வலவு பெரிது என்று கேட்டால், ஒரு கால்பந்தின் அளவு என்று சொல்லலாம்.

வெளியே முரடனாக இருந்தாலும் இவன் உள்ளே இதமாக உள்ளவன். மிகவும் மென்மையாக இருப்பான் உள்ளே! பழங்களின் சுலைகள் மஞ்சல் நிறத்தில் இருக்கும் (ஒரு சில வகையான டுரியான்களில் ஆரஞ்சு நிறமாகவும் இருக்கும்). சாதாரணமா மற்ர பழங்களை வெட்டுவதுப்போல் இவனை வெட்ட முடியாது / அப்படி வெட்டவும் கூடாது. மற்ற பழங்களை நீங்கள் ஒரே வெட்டில் அந்த பழத்தை ருசிக்க ஆரம்பித்து விடலாம். ஆனால் டுரியானின் அறைகள் அறைகளாக இருக்கும். ஒவ்வொரு அறையிலும் இரண்டு மூன்று சுலைகள் மட்டுமே இருக்கும். நீங்கள் பழத்தை கடையில் வாங்கும்போதே கடைக்காரன் சின்னதாய் முக்கோண வடிவில் வெட்டி வைத்திருப்பான். அதனை வழிக்காட்டாக கொண்டு நீங்க ஒவ்வொரு அறையையும் கண்டு பிடித்து திறக்க வேண்டும் (இதனை திறக்க உங்களுக்கு கத்தி தேவையே படாது. கையாலேயே திறக்கலாம்). பழத்தை நீங்க கடித்து மென்னு சாப்பிட வேண்டும் என்ற அவசியமும் இல்லை. அதன் சுலைகல் மிருதுவாக இருக்கும். வயில் வைத்தால்பஞு மிடாய் எப்படி கரையுமோ அதே போல் கரையும். உங்கள் பொக்கை வாய் தாத்தா பாட்டிக்கும் டுரியானை நீங்கள் வாங்கி தரலாம். :-)

பழங்களில் ஒரு சின்ன பகுதியை முக்கோண வடிவமாய் வெட்டப்பட்ட காட்சி: இதில் நாம் உள்ளே உள்ள பழம் எப்படி இருக்கின்றது என்றும் கவனிக்கலாம்.
டுரியான் சுலைகளும், அறைகளும்

கண்மணி: இது என்ன எங்க ஊரு பலாப்பழம் போல இருக்கு.சுளை சுளையா இருக்குமா?தனியே எடுத்து ஒரு போட்டோ காட்டியிருக்கலாம்.

யக்கா, இது பலாப்பழம் இல்லை. மேல் விளக்கத்துக்கு மேளே உள்ள பதிலை கவனியுங்கள். :-)

நீங்கள் கேட்டது போலவே நான் சில படங்களை இந்த பதிவில் இணைத்துள்ளேன். :-)

டுரியான் அறைகள் இதில் நன்றாக தெரிகிறது.


கனக்ஸ்: இந்த தூரியானை எமது ஈழத்தில் "அன்னமுன்னாப் பழம்" என்பார்கள் என்று கேள்விப்பட்டிருக்கிறேன். தெரிந்தவர்கள் சொல்லவேண்டும்.

இது துரியான் இல்லை. இது டுரியான் (Durian). அன்னமுன்னாப் பழம் பற்றி இணையத்தில் தேடினேன். ஒரு தகவலும் தெரியவில்லை. ஈழத்து நண்பர்கள் யாரவது இதற்கு பதிலளிப்பார்கள் என்ரு நம்புகிறேன் கனக்ஸ். அப்படி எனக்கு விஷயம் தெரிந்தால் நானே சொல்கிறேன். ஆனால், இந்தியாவிலேயே கிடைக்காத இந்த பழம் ஈழத்தில் கிடைக்குமா என்று எனக்கு சந்தேகமாக இருக்கிறது. ஏனென்றால், இந்தியாவின் தற்ப்பவெப்ப நிலையும் இலங்கையின் தற்ப்பவெப்பநிலையும் ஓரளவு ஒன்றுதானே!

டுரியான் அறைகள் இதில் நன்றாக தெரிகிறது.


கனக்ஸ்: இந்த தூரியானை எமது ஈழத்தில் "அன்னமுன்னாப் பழம்" என்பார்கள் என்று கேள்விப்பட்டிருக்கிறேன். தெரிந்தவர்கள் சொல்லவேண்டும்.

இது துரியான் இல்லை. இது டுரியான் (Durian). அன்னமுன்னாப் பழம் பற்றி இணையத்தில் தேடினேன். ஒரு தகவலும் தெரியவில்லை. ஈழத்து நண்பர்கள் யாரவது இதற்கு பதிலளிப்பார்கள் என்ரு நம்புகிறேன் கனக்ஸ். அப்படி எனக்கு விஷயம் தெரிந்தால் நானே சொல்கிறேன். ஆனால், இந்தியாவிலேயே கிடைக்காத இந்த பழம் ஈழத்தில் கிடைக்குமா என்று எனக்கு சந்தேகமாக இருக்கிறது. ஏனென்றால், இந்தியாவின் தற்ப்பவெப்ப நிலையும் இலங்கையின் தற்ப்பவெப்பநிலையும் ஓரளவு ஒன்றுதானே!

 

 

http://chitchatmalaysia.blogspot.com/ 

 

 
< Prev   Next >

இந்த இதழில்..

தொகுப்பாளரின் மேசையிலிருந்து
ஹிந்து ஆசிரியர் என்.ராமின் பத்திரிக்கையாளர் முகமூடி...
*நட்சத்திரம்* : மொழி ஞாயிறு தேவ நேயப் பாவாணர் !
இந்திய கீரைக்கட்டு (சிறப்புக்கட்டுரை)
ஈழத்துத் தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல்
உள்ளது உள்ளபடி
எனிமி அட் ஹோம் + எலக்சன் அட் ஹோம் ?
ஒரு கணிப்பொறியாளனின் கனவு!!
ஓவியம் ஒன்று
கனவுகளைத் தொலைத்தவள்
கூடைக்குள் தேசம் -01
கூத்தணி ஆட்சி !
கேன்சருடன் ஒரு யுத்தம்
சிங்கப்பூரில் தமிழ் இல்லாத இடம்...
"இலங்கையில் இருக்கிறம்".
பட்டையை கிளப்பும் பாமக அரசியல் பரட்டை அரசியலா?
பரதேசி அரசியல் நடத்தும் பா.ம.க.
பூமி-- 1800 களில்: அமெரிக்க சிவப்பிந்தியத்தலைவரின் பார்வையில்
மென் துறையில் பெண்கள் உப்புக்குச் சப்பாணியா..?
மேமோகிராம்,எஃப்.என்.ஏ.சி.சோதனைகள்
ரஜினியின் வில்லன்கள் சிலரும் காசிமேடு ஆதியும் - எனது பார்வையில்
1996 டிசெம்பர்
வாசகர் எதிர்வினை
*நட்சத்திரம்* : புணரபி மரணம் ! (சிறுகதை)