|
அருள் குமார்
|

அரும்பிக்கொண்டே இருக்கின்றன
மொட்டுகள்-
புதிது புதிதாய்
மலர்ந்த சிலவும்
வாடத்துவங்கும்
மலர்ந்த நொடியிலிருந்தே
மலரும் வாய்ப்பும்
வாடும் நிதர்சனமும்
அறிந்தே அரும்பும்
புதிய மொட்டுகள்-
ஆதி அரும்பின் பரவசத்திற்கு
சற்றும் குறையாத பூரிப்புடன்!
http://arul76.blogspot.com/2006/09/blog-post_115941742090762953.html
|