ஜெகன்நாதன் எந்த சாதியோ
சாத்திய அறைக்குள்
அடிமை பட்டம் பூட்டப்பட்ட
ஜெகன்நாதன் என்ன சாதியோ
எங்கள் நிழல் அவனுக்கு தீட்டாம்
சாத்திய கதவுக்கு சொந்தகாரர்கள்
சாசனம் எழுதினார்கள்
சாசன கதவுக்கு வெளியே நாங்களும்
உள்ளே ஜெகன்நாதனும்
வாசிக்க தெரியாதவனா ஜெகன்நாதன்
செவிட்டு பயலாய் இருக்கின்றானா
சாசனமும் மறுக்கவில்லை
எங்கள் அழைப்பும் அவன் கேட்கவில்லை
ஊர் கூடி பேசி பார்த்தோம்
நாட்டாமைகள் சிலர்
எங்களுக்கும் பாத்தியதை உண்டென்றார்கள்
அதை கேட்டு அவனை பார்க்க போக
நிழல் பட்ட தீட்டெடுக்க இரண்டு நாள் பூசை
நாட்டாமைகளும் சிறையிருக்கும் ஜெகன்நாதனும்
சேர்ந்திருக்க வாழ்த்தி விட்டு
வேறு சாமி பார்த்துக் கொண்டோம்
நன்றி; ndtv.com



