இந்த வாரம்

முகப்பு
குழந்தைகள்
கலைக்கூடம்
இலக்கியம்
நிகழ்வுகள்
அரசியல்
அறிவியல்
துணுக்குகள்
சுற்றுலா
மெய்பேணல்
பொருளாதாரம்
விளையாட்டு
செய்தி விமர்சனம்
நிர்வாகம்
அசைபடங்கள்
மொழி
வாழ்க்கை
சமூகம்
இணையம்
முன் மாதிரி மாணவர்கள் Print E-mail
மங்கை   

நமக்காக பல சட்டங்கள் இது வரை அமலுக்கு வந்து விட்டன. அந்த சட்டம் எல்லாம் எந்த அளவிற்கு மக்களுக்கு உதவியாக இருக்கிறது என்பது மில்லியன் டாலர் கேள்வி. ஆனால் அன்மையில் அமலுக்கு வந்த தகவல் உரிமை சட்டம் ஓரளவிற்கு மாறுதல்களை செய்து வருகிறது என்பதை நாம் ஒப்புக் கொள்ளத்தான் வேண்டும். இந்த சட்டத்தின் அடிப்படை நோக்கமே அரசின் பொதுநல விஷயங்களில் வெளிப்படையான தகவல்களை தரவேண்டும் என்பது தான் என்பதை நாம் அறிவோம். இந்த சட்டத்தை பயன் படுத்துவது நம் கையில் தான் இருக்கிறது. நமக்கு இருக்கும் சமுதாய பொறுப்பை சீண்டிப் பார்க்கும் ஒன்று என்று கூட எனக்குத் தோன்றும்.

அமலாக்கப் படும் எந்த ஒரு சட்டமும் மக்களின் நலனை கருத்தில் கொண்டே இயற்றப் பட்டாலும், போதிய விழிப்புணர்வு இல்லாமல் மக்கள் அதை சரிவர உபயோகிக்க முடியாமல் போகிறது. படித்தவர்கள், படிக்காதவர்கள் என்று அனைவருக்கும் இந்த விழிப்புணர்வு தேவை. இந்த விழிப்புணர்வை ஏற்படுத்த பல தொண்டு நிறுவணங்கள் இன்று களத்தில் இறங்கியுள்ளது. விழிப்புணர்வுடன் சேர்ந்து இன்று நமக்கு தேவை சமுதாய முன்னேற்றப் பணிகளில் அக்கறை, நம்மைச் சுற்றி நடப்பனவற்றில் கவனம்.

மேலே கூறிய சமுதாய பொறுப்பை உணர்ந்து சில ஐஐடி மாணவர்கள், இங்கு தில்லியில் இந்த சட்டத்தை நல்ல முறையில் பயன்படுத்தி இருக்கிறார்கள். தில்லியில் உள்ள சில முக்கிய சாலைகள் (ரிங் ரோடு, NH-10, NH-24) சரி வர பராமரிக்கப்படாததால், தினமும் அந்த சாலை வழியே வரும் ஐஐடி மாணவர்கள் இந்தச் சட்டத்தின் கீழ் 46 விண்ணப்பங்களை தாக்கல் செய்திருக்கிறார்கள். சாலை இடப்பட்ட சில தினங்களுக்குள் ஏன் அதில் வெடிப்புகளும், குழிகளும் ஏற்படுகின்றன?, பராமரிப்புச் செலவிற்காக ஒதுக்கப்பட்ட தொகை (சுமார் 420 கோடி), சாலை இடப்பட்ட பின் நடத்திய ஆய்வு ரிப்போர்ட் ஆகிய தகவல்களை கேட்டு இந்த மாணவர்கள் விண்ணப்பங்கள் தாக்கல் செய்துள்ளனர்.

அரசு செய்து முடித்த வேலைகளை ஆய்வு செய்யவும் இந்த சட்டம் உதவுமாதலால், இந்த சாலைகளின் தரத்தை மீண்டும் ஒரு முறை ஆய்வு செய்ய வேண்டும் என்றும் விண்ணப்பித்திருக்கிறார்கள்.

சுவாதி என்ற ஒரு மாணவி தாக்கல் செய்த ஒரு விண்ணப்பத்தின் பயனாக, சில மாணவர்களும், அரசு பணியில் இருந்து ஓய்வு பெற்ற ஒரு பொறியாளரும் இந்த சாலையை ஆய்வு செய்தார்கள். இவர்கள் ஆய்வு செய்யப் போவதை அறிந்து, இரண்டு நாட்களுக்கு முன் சாலை பராமரிப்பு பணிகளை துவங்க உத்தரவிட்டனர் அதிகாரிகள்.

இளைய சமுதாயம் இது போல பொறுப்புடன் நடந்து கொள்வது மன நிறைவைத் தருகிறது. நம் சமுதாய அக்கறையை ஒரு முறை சுய பரிசோதனை செய்யத் தூண்டும் ஒரு செயல்பாடு. இவர்களைப் போல ஒவ்வொரு மாணவரும் சிந்தித்தால் ஆரோக்கியமான ஒரு சந்ததி உருவாகும் என்பதில் ஐயம் இல்லை.
 
< Prev   Next >

இந்த இதழில்..

தொகுப்பாளரின் மேசையிலிருந்து
ஹிந்து ஆசிரியர் என்.ராமின் பத்திரிக்கையாளர் முகமூடி...
*நட்சத்திரம்* : மொழி ஞாயிறு தேவ நேயப் பாவாணர் !
இந்திய கீரைக்கட்டு (சிறப்புக்கட்டுரை)
ஈழத்துத் தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல்
உள்ளது உள்ளபடி
எனிமி அட் ஹோம் + எலக்சன் அட் ஹோம் ?
ஒரு கணிப்பொறியாளனின் கனவு!!
ஓவியம் ஒன்று
கனவுகளைத் தொலைத்தவள்
கூடைக்குள் தேசம் -01
கூத்தணி ஆட்சி !
கேன்சருடன் ஒரு யுத்தம்
சிங்கப்பூரில் தமிழ் இல்லாத இடம்...
"இலங்கையில் இருக்கிறம்".
பட்டையை கிளப்பும் பாமக அரசியல் பரட்டை அரசியலா?
பரதேசி அரசியல் நடத்தும் பா.ம.க.
பூமி-- 1800 களில்: அமெரிக்க சிவப்பிந்தியத்தலைவரின் பார்வையில்
மென் துறையில் பெண்கள் உப்புக்குச் சப்பாணியா..?
மேமோகிராம்,எஃப்.என்.ஏ.சி.சோதனைகள்
ரஜினியின் வில்லன்கள் சிலரும் காசிமேடு ஆதியும் - எனது பார்வையில்
1996 டிசெம்பர்
வாசகர் எதிர்வினை
*நட்சத்திரம்* : புணரபி மரணம் ! (சிறுகதை)