இந்த வாரம்

முகப்பு
குழந்தைகள்
கலைக்கூடம்
இலக்கியம்
நிகழ்வுகள்
அரசியல்
அறிவியல்
துணுக்குகள்
சுற்றுலா
மெய்பேணல்
பொருளாதாரம்
விளையாட்டு
செய்தி விமர்சனம்
நிர்வாகம்
அசைபடங்கள்
மொழி
வாழ்க்கை
சமூகம்
இணையம்
உடன்பிறப்புகளுக்கு வெட்கமில்லை Print E-mail
குழலி   

ஒரு கருத்து திணிப்பு அதை தொடர்ந்து ஒரு கலவரம், சன் தொலைக்காட்சி மற்றும் தினகரன் அலுவலகம் மதுரையில் கொளுத்தப்படுகின்றது உள்ளே உயிரை விடுகின்றனர் மூவர்.... கருத்தை திணித்தது மச்சான் பொங்கியெழுந்தது மாமன், ஆனால் செத்ததோ மாச சம்பளம் வாங்கும் அப்பாவிகள்.... அதன் தொடர்ச்சியாக வலைப்பதிவுகளில் விவாதம், இதற்காகவே காத்திருந்தது மாதிரியான இட்லிவடைகளும் சட்னி சாம்பார்களும், முகமூடிகளும் கெட்ட ஆட்டம் போட்டன, இவர்கள் எதற்காக இந்த ஆட்டம் என்பது தெரிந்ததுவே, மூன்றுக்கு பதில் முப்பதாக இருந்திருந்தால் இன்னும் கூட சந்தோசம் பொங்கியிருந்தாலும் பொங்கியிருக்கும், இதையும் எதிர்பார்த்தே இருந்ததால் பெரிதாக பாதிக்கவில்லை, ஆனால் அதன் பிறகு வெளிவந்த சில பதிவுகள் புரட்டி போட்டன.


யோக்கியவான் எடுக்கட்டும் முதல் கல்லை என்றார் வரவனையன், அதிலே அழகிரியின் அணுக்கம் எளிமை இன்ன பிற விசயங்களை புளங்காகிதப்பட்டு கூறியிருக்கிறார், சரி இருக்கட்டுமே, அதற்காக மூன்று பேரை உயிரோடு கொளுத்த யார் கொடுத்தது அதிகாரம்?

"எந்த பதவியும் வேண்டாமென்று இருக்கும் ஒரு நபரை, களத்திலேயே இல்லாத ஒரு நபரை தோற்றுபோனதாய் அறிவிப்பது போக்கிலித்தனமின்றி வேறென்ன." சரி தான் போக்கிரித்தனம் தான், ஒரு கட்சி பதவியில் கூட இல்லாத, ஒரு கார்ப்பரேசன் கவுன்ஜிலராக கூட இல்லாத "அஞ்சா நெஞ்சன்" அழகிரியின் பெயர் கருத்து கணிப்பில் வந்துள்ளது இது நியாயமா? இது நீதியா? எல்லாம் சரிதான் பிறகேன் இந்த அஞ்சா நெஞ்சனின் வீட்டு முற்றத்தில் கிடக்கின்றது தென்மாவட்ட திமுக?

அழகிரியின் அல்லக்கை அட்டாக் பாண்டி சுமோவில் 18 பேரை ஏற்றிக்கொண்டு மதுரை தினகரன் அலுவலகம் போனதற்கு பதிலாக நேராக வண்டியை அறிவாலயத்துக்கு ஓட்டி தயாநிதி மாறனையோ கலாநிதிமாறனையோ ரெண்டு போடு போட்டிருந்தால் "அஞ்சா நெஞ்சன்" அழகிரி தாம்லே ஒத்துக்கறோம், அட அந்த கலாநிதி மாறன் மதுரை கோட்டைக்கே தான் ப்ளைட்டு புடிச்சி வந்தாரே அப்போ என்ன கிழித்தார்கள்? அதைவிட்டுவிட்டு அப்பாவிகள் 3 பேருக்கு மோட்சம் தந்தது எந்தவிதத்தில் நியாயம், ஊடகங்கள் தங்கள் பேனா முனையால் வன்முறை செய்யும்போது அதை உருட்டை கட்டையால் வேணுமானாலும் எதிர்கொள், பெட்ரோல் பாமினால் வேணுமானாலும் எதிர்கொள் ஆனால் கொளுத்தும் முன் அப்பாவிகளை வெளியேற்றிவிட்டு கொளுத்து....

பொதுவாக அழகிரி ஆதரவு பதிவுகள், சிலர் இட்ட பின்னூட்டங்கள் சொல்ல விழைந்தது இதன் பின்னால் பார்ப்பனியம் இருக்கிறது, மாறன்களின் பதவி ஆசை இருக்கிறது, குட்டையை குழப்புகிறார்கள் என்றெல்லாம் சொல்லப்பட்டதே தவிர (இந்த காரணங்களையெல்லாம் நான் மறுக்கவில்லை என்ற போதும்) அழகிரியின் ரவுடித்தனம் மூன்று அப்பாவிகள் கொல்லப்பட்டது குறித்து மூச்சு விடவில்லை, ஏன் இதை எழுதினால் ஆட்டோ வந்துவிடுமா? அல்லது திமுக மாவட்டசெயலாளர் பதவி பறிபோய்விடுமா? இந்த 3 அப்பாவிகள் கொல்லப்பட்டதில் எந்த விதமான சலனமும் இல்லையா? அப்படி சலனம் இருந்தால் அதை காட்டாமல் எழுதுவது மனசாட்சிக்கு விரோதமானதாகாதா?

ஜெயலலிதாவிற்காக பஸ்ஸை கொளுத்தியதில் அடிமட்ட தொண்டனையோ அல்லது ஜெயலலிதாவிற்காக காதறுத்துக்கொண்டவனையோ கேட்டுப்பாருங்கள் சொல்வான், அந்த நாசமா போன கருணாநிதி அம்மா மேல வேணுமின்னே கேசை போட்டு ஜட்ஜ்ங்களை மெரட்டி தண்டனை வாங்கி கொடுத்துட்டான் என்று சாபம் விடுவார்கள், அந்த மாதிரியான தொண்டனுக்கும் இவர்களுக்கும் வித்தியாசமில்லையா?

ஒரு இயக்கத்தின் கோட்பாடுகளில் நம்பிக்கை இருக்கிறது, ஒரு இயக்கத்தின் தலைவனை பிடித்திருக்கிறது என்பதற்காக அந்த இயக்கத்தின் எல்லா இழி செயல்களுக்கும் முட்டு கொடுக்க வேண்டுமென்ற அவசியமெதுவுமில்லையே..... இந்த ஒரு காரணத்திற்காகவே அந்த இயக்கத்தின் மீதான பிடிப்பையோ, அதன் செயல்பாடுகளுக்கு எதிராகவோ செல்ல வேண்டுமென்றில்லைதான்.

விஜய் டிவியின் நீயா? நானா? என்றொரு நிகழ்ச்சியின் விளம்பரத்தில் சொல்லப்படுவது "உங்களின் கருத்துகள் உங்களுக்கு சரியானதாகவே இருக்கலாம், அது குடும்பத்திற்கெதிராக இருக்கலாம், சமுதாயத்திற்கு எதிராக கூட இருக்கலாம், ஏன் நாட்டிற்கே கூட எதிராக இருக்கலாம் ஆனால் மனித நேயத்திற்கு எதிராக இருக்கக்கூடாது" இதையே தான் நான் வலியுறுத்த விரும்புவதும்.

 
< Prev   Next >

இந்த இதழில்..

தொகுப்பாளரின் மேசையிலிருந்து
ஹிந்து ஆசிரியர் என்.ராமின் பத்திரிக்கையாளர் முகமூடி...
*நட்சத்திரம்* : மொழி ஞாயிறு தேவ நேயப் பாவாணர் !
இந்திய கீரைக்கட்டு (சிறப்புக்கட்டுரை)
ஈழத்துத் தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல்
உள்ளது உள்ளபடி
எனிமி அட் ஹோம் + எலக்சன் அட் ஹோம் ?
ஒரு கணிப்பொறியாளனின் கனவு!!
ஓவியம் ஒன்று
கனவுகளைத் தொலைத்தவள்
கூடைக்குள் தேசம் -01
கூத்தணி ஆட்சி !
கேன்சருடன் ஒரு யுத்தம்
சிங்கப்பூரில் தமிழ் இல்லாத இடம்...
"இலங்கையில் இருக்கிறம்".
பட்டையை கிளப்பும் பாமக அரசியல் பரட்டை அரசியலா?
பரதேசி அரசியல் நடத்தும் பா.ம.க.
பூமி-- 1800 களில்: அமெரிக்க சிவப்பிந்தியத்தலைவரின் பார்வையில்
மென் துறையில் பெண்கள் உப்புக்குச் சப்பாணியா..?
மேமோகிராம்,எஃப்.என்.ஏ.சி.சோதனைகள்
ரஜினியின் வில்லன்கள் சிலரும் காசிமேடு ஆதியும் - எனது பார்வையில்
1996 டிசெம்பர்
வாசகர் எதிர்வினை
*நட்சத்திரம்* : புணரபி மரணம் ! (சிறுகதை)