இந்த வாரம்

முகப்பு
குழந்தைகள்
கலைக்கூடம்
இலக்கியம்
நிகழ்வுகள்
அரசியல்
அறிவியல்
துணுக்குகள்
சுற்றுலா
மெய்பேணல்
பொருளாதாரம்
விளையாட்டு
செய்தி விமர்சனம்
நிர்வாகம்
அசைபடங்கள்
மொழி
வாழ்க்கை
சமூகம்
இணையம்
ஒரு நாள் பிரபலங்கள்? Print E-mail
பிரபு ராஜதுரை   

 

வருடா வருடம், பன்னிரண்டாம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளிவருகையில், மற்ற செய்திகளை பின் தள்ளி நம்மில் பெரும்பாலோனோர் ஆர்வத்துடன் கவனிப்பது, யார் மாநிலத்திலேயே முதலாவதாக வந்தவர் என்பதுதான். ஊடகங்களும், மக்களின் இந்த பெரும் ஆர்வத்தினை கவனத்தில் கொண்டு முதலாவது வந்தவரின் குடும்பம், பள்ளி மற்றும் எதிர்காலக் கனவுகள் இவற்றிற்கு பெரும் முக்கியத்துவம் கொடுத்து வெளியிடுகின்றன...

ஒரு மாநிலத்திலேயே அதுவும் பல்லாயிரக்கணக்கானவர்கள் பெரும் முயற்சியெடுத்து பங்கு பெரும் தேர்வில் முதலாவது வருவது என்பது சாதாரணமானதல்ல. மேலும் அவ்வாறு முதலாவது வருபவர்களின் மதிப்பெண்களை கவனிப்போமென்றால், நம்மில் பலரின் கற்பனைக்கும் எட்டாத அளவில் இருக்கிறது.

இப்படிப்பட்டவர்கள் ரத்தமும், சதையுமான மனிதர்களாக இருக்கக்கூடுமா என்ற சந்தேகம், பள்ளி நாட்களில் இருந்து என்னைத் தொடர்கிறது.

இவர்கள் அசாதரணர்கள் என்பதில் எவ்வித சந்தேகமுமில்லை.

ஆனால், இத்தகைய அசாதரணத்துவம் இவர்களின் வாழ்க்கையில் இவர்களை பின் தொடர்கிறதா என்ற கேள்விக் குறிக்கு எந்தப் ஊடகமும் இது வரை விடை தரவில்லை என்றே கருதுகிறேன்.

ஆண்டு தோறும் இவ்வாறு அசாத்திய மதிப்பெண் பெறும் சில மாணவர்கள் ஊடகங்களால் முன்னிறுத்தப்படுகிறார்கள். ஆனால், இன்று என்னவாகியிருக்கிறார்கள் இவர்கள்?


***

தமிழகத்தினைப் பொறுத்தவரை இன்றைய நிலையில் சாதனையாளர்கள், பிரபலங்கள் என்று கருதப்படுபவர்கள் அரசியல்வாதிகள், திரைப்படத்துறையினர் மற்றும் விளையாட்டு வீரர்கள். மாநிலத்திலேயே முதலாவது வந்த அசாதரணர்கள் இவற்றுள் ஒன்றாக உருப்பெற்றதாக நான் இதுவரை அறிந்ததில்லை.

அடுத்ததாக, தொழிலதிபர்கள்! கலாநிதி மாறனோ, சரவணா ஸ்டோர்ஸ் அண்ணாச்சியோ மாநிலத்தில் முதலாவதாக வந்திருக்க வாய்ப்பில்லை.

தமிழக ஊடகங்களால் பிரபலப்படுத்தப்படும் உயர்நீதிமன்ற நீதிபதிகளோ, வழக்குரைஞர்களோ மாநிலத்தில் முதலாவதாக வந்திருக்கும் சாத்தியக்கூறுகள் இல்லவே இல்லை...ஏனெனில் அப்படி வருபவர்களுக்கு சென்னை மருத்துவக் கல்லூரி அல்லது கிண்டி பொறியியற் கல்லூரியினைத் தவிர வேறு கல்லூரிகள் இருப்பதாக தெரிந்திருப்பதில்லை.

சரி, தமிழகத்தில் இன்று மருத்துவத்தின் ஒவ்வொரு துறையிலும் பிரபலமான மருத்துவர் என்று சிலரை குறிப்பிடலாம். இவர்களில் எங்காவது ஒளிந்திருக்கிறார்களா...இந்த அதிசய மனிதர்கள்?

பொறியாளர்களோ சக பொறியாளர்களைத் பின் தள்ளி தன்னை பிரபலமாக முன்னிறுத்துவது அபூர்வம். தனியே கட்டிடக்கலை நிபுணராக பணி செய்பவருக்கு மட்டுமே அது சாத்தியம். அகில இந்திய அளவில் நான் அறிந்த பிரபலமான கட்டிடக் கலை நிபுணர் ஹஃபீஸ் காண்டிராக்டர்! அவ்வாறு தமிழகத்தில் யாராவது இருக்கிறார்களா...அவ்வாறென்றால் அவர் மாநில அளவில் முதலில் வந்தவரா என்று கேட்க வேண்டும்!

ஒருவேளை பொறியியல் அல்லது மருத்துவம் படித்த பின்னர் இந்திய சிவில் பணிக்கு சென்று விட வாய்ப்பு உண்டு! காவலர்களைப் பொறுத்தவரை ‘சட்’டென்று நினைவுக்கு வருவது எப்வி அருள், விஆர் லட்சுமி நாராயணன், பரமகுரு, மோகன்தாஸ், வால்டர் தேவாரம், கார்த்திகேயன், விஜயகுமார். ஆட்சிப்பணியாளர்களில் சேஷன் இந்திய அளவில் பிரபலமானார்...தமிழக அளவில் நின்று போனவர்களில் என்றால் சிறைக்குப் போன ஹரி பாஸ்கரும், நாகராஜனும் மட்டுமே பிரபலங்களாக நினைவுக்கு வருகிறார்கள். இவர்களில் சிலர் நன்றாக மதிப்பெண் எடுத்தவர்கள் என்று அறிவேன். ஆனால் பதினோராவது வகுப்பில் மாநிலத்திலேயே முதலாவது வந்ததாக எங்கும் படிக்கவில்லை. வெளியுறவுத்துறையில் பிரபலம் என்றால் பார்த்தசாரதி, ராஜீவ் காலத்தில் ராஜினாமா செய்தவர் பின்னர் ஹிந்து ராம். யாராயினும் மாநிலத்தில் முதலாவது வந்தவர்களா?

ஒருவேளை விஞ்ஞானியாக...அப்துல் கலாம்? சரி, சுஜாதா ரங்கராஜன். இவர்கள் இருவரும் பொறியியற் கல்லூரியில் இடம் கிடைக்கும் அளவு கூட மதிப்பெண் பெற்றிருக்கவில்லை என நினைக்கிறேன். இளங்கலை அறிவியல் படித்து பின்னர் மூன்று வருடம் எம் ஐ டி டிப்ளமோ பெற்றவர்கள்.

தமிழகத்தில் இன்று புகழ் பெற்ற எழுத்தாளர்களாக, ஓவியராக, ஆடை அலங்கார நிபுணர்களாக, சமையற்கலை விற்பன்னர்களாக, சமூக சேவகராக, மத தலைவராக அல்லது வேறு ஏதாவது துறையில் முன்னோடியாக விளங்கும் எவராவது ஒருவராக இவ்வாறு மாநிலத்தில் முதலாவது வந்தவர்கள் இருக்கிறார்களா?

இல்லையென்றால், பின்னர் எங்கேதான் சென்றார்கள்?

 

 
< Prev   Next >

இந்த இதழில்..

தொகுப்பாளரின் மேசையிலிருந்து
ஹிந்து ஆசிரியர் என்.ராமின் பத்திரிக்கையாளர் முகமூடி...
*நட்சத்திரம்* : மொழி ஞாயிறு தேவ நேயப் பாவாணர் !
இந்திய கீரைக்கட்டு (சிறப்புக்கட்டுரை)
ஈழத்துத் தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல்
உள்ளது உள்ளபடி
எனிமி அட் ஹோம் + எலக்சன் அட் ஹோம் ?
ஒரு கணிப்பொறியாளனின் கனவு!!
ஓவியம் ஒன்று
கனவுகளைத் தொலைத்தவள்
கூடைக்குள் தேசம் -01
கூத்தணி ஆட்சி !
கேன்சருடன் ஒரு யுத்தம்
சிங்கப்பூரில் தமிழ் இல்லாத இடம்...
"இலங்கையில் இருக்கிறம்".
பட்டையை கிளப்பும் பாமக அரசியல் பரட்டை அரசியலா?
பரதேசி அரசியல் நடத்தும் பா.ம.க.
பூமி-- 1800 களில்: அமெரிக்க சிவப்பிந்தியத்தலைவரின் பார்வையில்
மென் துறையில் பெண்கள் உப்புக்குச் சப்பாணியா..?
மேமோகிராம்,எஃப்.என்.ஏ.சி.சோதனைகள்
ரஜினியின் வில்லன்கள் சிலரும் காசிமேடு ஆதியும் - எனது பார்வையில்
1996 டிசெம்பர்
வாசகர் எதிர்வினை
*நட்சத்திரம்* : புணரபி மரணம் ! (சிறுகதை)