|
பிசாசுகள் வாழும் விடுதியில் வாழ்கிறேன். |
|
|
|
வா. மணிகண்டன்
|
பிண அமைதி
மரண ஓலம்
எது எப்பொழுது என்று தெரியாத
பிசாசுகள் வாழும் விடுதியில் வாழ்கிறேன்.
மின்சாரம் இல்லாத
இந்த மயான இரவில்
மரண ஓலம் கேட்கிறது
எலும்புகள் உருக
கண்களைத் திறக்காமல் கிடக்கிறேன்.
இந்த படுக்கையில்
வியர்வைக்குளமாக
கசங்கிய ஈரத்துணியாக
அல்லது
பிறரின் சொற் கூட்டமாக
மாறிவிடுவேன்.
இந்தப் பிசாசுகளை மட்டுமல்ல-
எல்லாவற்றையும்
விட்டுச்செல்கிறேன்.
இனி
அலுப்பு இல்லை
வெறுப்பு இல்லை
முகத்தைச் சுளித்து
இவைகளை
சலித்துக் கொள்ள வேண்டிய அவசியமில்லை
சந்தோஷமில்லை.
துக்கமுமில்லை.
மோனநிலையா
அவஸ்தையா
புரியாத சமயத்தில்
மின்விசிறி சுழன்று
சில்லிடச் செய்கிறது.
http://pesalaam.blogspot.com/2007/06/blog-post.html
|