தங்க நாற்க்கர சாலைகள் என்ன?, பட்டன் அளவே உள்ள கைத் தொலைபேசிகள் என்ன? வித விதமாய் ஆடைகள், ஆங்கில படங்களுக்கு நிகராக தமிழகத்திலேயே வாழ்க்கை நடத்த பன்னாட்டு கம்பேனிகள் வீட்டு வாசலில் வந்து நமது உச்சி முகர்ந்து கொஞ்சி கூத்தாடும் அற்புதம் என்ன? என்னே இந்த இந்தியாவின் வளர்ச்சி பாரீர்.
ஆனால் இதே இந்தியாவில் மிகப் பெரும்பான்மை மக்கள்(30% மேல்) 12ரூபாய் காசில் தின வாழ்க்கையை ஓட்டும் அவலமும் நடக்கிறது. இதே இந்தியாவில்தான் காலையில் மலம் கழிக்க இடமின்றி மக்கள் அல்லலுறும் அவலமும் நடந்தேறுகிறது.
அட நீ ஒன்னு, அவிங்கள்ளாம் கொழுப்பெடுத்தவனுங்க, காலைக் கடன்களை ரோட்டிலேயே இருப்பானுங்க இன் டீசண்ட் ஃபேலோஸ் - இப்படி ஒரு அல்பை அலுத்துக் கொள்வது காதில் கேட்க்காமலில்லை. ஆமாம் கிராமங்களில் அவர்களது வாழ்க்கையை தொலைத்த அவ்ர்கள் இன் டீசண்ட் ஃபேலோஸ்தான், வாழ்வுரிமை பறிக்கப்பட்ட இந்த பெரும் பட்டாளத்தை குறைந்த கூலிக்கு நகரங்களில் சுரண்டி தின்க்கும் நடுத்தர மற்றும், உயர் வர்க்கமோ டீசண்டொ டீசண்ட்.... தூ..... உண்மையில் காலை மலத்தின் அதி அற்புத மணத்தை விட இவர்களின் இந்த பிழைப்புவாத கள்ளமௌனமும், நாகரிகம் குறித்த பொய் நடிப்புகளுமே ஆகக் கேவலமாக மூக்கையடைக்கிறது.
இந்த பெரும்பான்மை மக்களின் அடிப்படை உரிமைகளை வெறுமே பிரச்சாரம் செய்து சொன்னால் அவர்களை சுரண்டுபவர்கள் ஏற்றுக் கொள்வார்களா? இப்படித்தான் ஒரு காந்திய கற்பனாவாதி சொல்லிக் கொண்டிருக்கிறார். உண்மையில அவரது சித்தாந்தத்தில் அவருக்கே நம்பிக்கை கிடையாது ஆயினும் ஒவ்வொருவருக்கும் தன்னை பற்றி ஒரு பிம்பத்தை உருவாக்கி பராமரிக்கும் நிர்பந்தம் உள்ளதல்லவா? நம்ம கற்பனாவாதிக்கும் அந்த அளவில் காந்தி தேவைப்படுகிறார் போலும். துரதிருஷ்டவசமாக காந்தியே இந்த விசயத்தில் படு கயமைத்தனமானவர். இப்படி பிரச்சாரம் செய்து அடக்கும் வர்க்கத்தை திருத்தி சமனிலை உருவாக்கலாம் என்று இவர் போன்றவர்கள் ஊரை ஏமாற்றிக் கொண்டிருக்கும் அதே நேரத்தில் மக்கள் தங்கள்து உரிமைகளை தாங்களே மீட்டெடுக்கும் போராட்ட வழிமுறைகளை இந்தியா முழுவதும் பல்வேறு இடங்களில் பரிசோதிக்கத் துவங்கியுள்ளனர்.
SEZக்களுக்கு எதிரான போராட்டங்கள் - வட கர்நாடக, புதுச் சேரி, சென்னை, பஞ்சாப், ராஜஸ்தான், நந்திகிராம், சிங்கூர் என்று பற்றிப் பரவுகிறது, சில்லறை வியாபாரி ரிலையன்ஸ் அம்பானி போலிஸ் பாதுகாப்புடன் தான் கடை நடத்த வேண்டும் என்ற நிலை ராஞ்சியில், பெருத்து தடித்து கொழுத்த ஊடகங்களோ அய்யரின் ஆசன வாயில் இருந்து வரும் வளிக்கு கொடுக்கும் முதற் பக்க முன்னுரிமையை மறந்தும் கூட இது போன்ற மக்கள் திரள் போராட்டங்களூக்கு கொடுப்பதில்லை. இதே போன்றதோரு போர்க்குணமிக்க போராட்டம் சமீபத்தில் கோயெம்பேடை ஒட்டியுள்ள மதுரவாயல் நகராட்சி பகுதியில் நடந்தது.
போபால் விசவாயு நடந்து வருசம் பல ஆகி விட்டது கற்பனாவாத போராட்டங்களை நடத்தி கண்ட பலன் ஒன்றுமில்லை. அதே விசவாயு குரூப் மேற்கு வங்கத்தில் Dow Chemicals என்ற பெயரில் மீண்டும் கடை பரப்பும் அவலம் தவிர. நர்மதா போராட்டம்... அடேங்கப்பா எத்தனை கவர்ச்சிகரமான போராட்டம் அது. பிருமாண்டமான பின்னனியுடன் அதனால் சாதிக்க முடிந்தது எல்லாம் ஒரு தேசிய விவாதத்தை எழுப்பியதை மட்டுமே. தேசிய விவாதஙகள் எழுவது என்ன புதிய விசயமா என்ன? பெண்களை கள்ள பாஸ்போர்ர்டில் கடத்தியோ, நாடாளூமன்றத்தில் பேசுவதற்க்கு துட்டு வாங்கியோ சுலபமான பல வழிகளில் தேசிய விவாதத்தை கிளப்பலாம். மணிப்பூரின் விடுதலைக்காக 6 வருடங்களாக உண்ணாவிரதம் இருந்து கண்ட பலன் மதிய இடைவேளியில் வயிறு முட்ட உண்ட பிற்பாடு ஒரு சுகமான ஏப்பாத்திற்க்கு பிற்பாடு வெளி வந்த ச்சோ... ச்சோ.. மட்டுமே.
அருந்ததிராய் சொல்கிறார்: "வன்முறையற்ற போராட்டங்களுக்கான முயற்சிகள் ஒவ்வொன்றின் மீதும் இந்த அரசு தனது கதவுகளை அறைந்து சாத்திவிட்டது. மக்கள் இப்பொழுது அதிகமாக துப்பாக்கிகளை நாடுகிறார்கள்"
மதுரவாயல் மக்களுக்கும் கூட இதே அனுபவம்தான். அருந்ததிராய் இங்கு துப்பாக்கி என்று சொல்வதை ஒரு குறீயீடாக எடுத்துக் கொள்ளலாம். அதாவது இந்த அரசு நமக்கான அரசு அல்ல என்பதை புரிந்து கொண்டு மக்கள் அதற்கேற்ப போராட்ட வடிவங்களை தீர்மானிக்கும் தன்மையை குறிப்பதாக கொள்ளலாம். மதுரவாயல் மக்களும் பல முறை முயன்ற பிற்ப்பாடு தங்களது போராட்ட முறைகளை மாற்றினர். கோரிக்கை வைத்து பலனில்லை. தாம் அனுபவிக்கும் துன்பம் என்னவென்பதை மணக்க மணக்க சம்பந்தப்பட்ட அரசுக்கு புரியவைப்பதே ஒரே வழி என்று தீர்மானித்து முள்ளை முள்ளால் - வன்முறையை வன்முறையால் ஈடுகட்ட களமிறங்கினர்.
மதுரவாயல் நகராட்சி அலுவலகத்தையே தமது தற்காலிக கழிவறையாக்க தீர்மானித்து ஒரு நல்ல நாளில் நகராட்சி அலுவலகத்தில் மலம் கழிக்கும் போராட்டத்தை புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி தலைமையில் நடத்தத் தீர்மானித்தனர். விசயம் கேள்விப்பட்ட அரசு நிர்வாகிகள் நிலையை நம்மால் கற்பனை செய்து பார்க்க முடிகிறது. காலையில் ஒருவர் உள்ளே போய் 'வெளியே' வந்த பிற்பாடு அடுத்த ஆள் உள்ளே போவதற்கே பல்வேறு சுவாசப் பிரச்சனைகளை சந்திக்கும் அவர்களுக்கு நாள் முழுவதும் ஒரு கழிப்பறையில் உட்கார்ந்து வேலை பார்ப்பது என்ற விசயம் கனவில் கூட கற்பனை செய்து பார்க்க முடியாத கோடுரமே. தமது மூக்கை பாதுகாக்கும் குறைந்த பட்ச தேவையை முன்னிட்டு உடனடியாக நடவடிக்கை எடுக்க முனைந்துள்ளது அரசு நிர்வாகம். அழுத குழந்தை பால் குடிக்கும் - லட்சம் விவசாயிகளின் தற்கொலை சாவு ஒரு டீக்கடை உரையாடலுக்கான தகுதியைக் கூட இழந்த அவலமும், 12 நந்திகிராம் மற்றும் ஒரிஸ்ஸா கலிங்காநகர் போராளிகளின் தியாகம் நாட்டையே உலுக்கி மக்கள் விரோத திட்டங்களை ஓட ஓட விரட்டிய அற்புதமும் நம் கண் முன்னே காணக் கிடக்கிறது. மலத்தை விசிறியடிக்கும் இந்த போராட்டமும் கூட இரண்டாம் வகையீனமே. அரசு, கலாச்சார நிறுவனங்களும் பல நுண்ணிய தளங்களீல் மக்கள் மீது வன்முறை செலுத்துகிறது எனில் மக்களின் எதிர் நடவடிக்கையும் அதற்க்கிடான நுண்ணிய தளங்களில் எதிர்வன்முறை செலுத்தும் வகையிலே அமைந்து விடுகிறது.
இரங்கிக் கேட்டு இதுவரை இந்த நாட்டாமை அரசும் நமது குரலுக்கு செவிமடுத்ததாக வரலாறு இல்லை. இதோ மதுரவாயல் மக்கள் மீண்டும் நமக்கு சொல்லித் தருகிறார்கள் - இந்த அரசுக்கு எப்படி லாடம் கட்டுவது என்று. ஜனநாயகம், நாகரிகம் என்று வழக்கம் போல ஏமாந்த சோனகிரி அல்பவாதிகள் புனிதங்களின் போதையில் மயங்கிக் கிடக்கட்டும். நாம் அநீதிகளை கண்ட இடத்திலேயே பொசுக்கும் மன வலிமை கொண்டு இயங்க வேண்டிய காலங்கள் நெருங்கிக் கொண்டிருக்கின்றன.
அசுரன்
பின்னுட்டத்தில் இது குறித்து செய்தி கொடுத்த அனானிக்கு நன்றி!
கழிவறை கட்டித்தர வக்கில்லாத மதுரவாயல் நகராட்சியை மலக்காடாக்குவோம்!
அன்பார்ந்த உழைக்கும் மக்களே!
சென்னை மாநகரத்தின் நுழைவு வாயில்களில் ஒன்றான கோயம்பேட்டின் அருகில் உள்ளது மதுரவாயல் நகராட்சி. இந்த நகராட்சியின் 2 - வது வார்டுதான் பிள்ளையார் கோவில் தெரு பகுதி. இப்பகுதியில் கடந்த 25 வருடங்களாக எவ்வித அடிப்படை வசதிகளும் இல்லாமல் சுமார் 2000 குடும்பங்கள் வசித்து வருகின்றன. குறிப்பாக மனித கழிவுகளை வெளியேற்றுவதற்கு கக்கூசு (கழிவறை) கூட இல்லாதது, இப்பகுதி அவலத்தின் உச்சம்.
ஒரு வீடோ , அலுவலகமோ கட்டும்போது அங்கு முதலில் அமைப்பது குடிநீர், கழிவறை போன்ற அடிப்படை வசதிகள்தான். இதை நகராட்சி விதிமுறைகள் கூட கூறுகின்றன. ஆனால் வரிவசூல் மூலம் கொள்ளையடிப்பதை மட்டுமே குறிக்கோளாகக் கொண்டுள்ள இப்பகுதி நகராட்சியோ உழைக்கும் மக்களின் அடிப்படை வசதிகளைப்பற்றிக் கண்டு கொள்வதே இல்லை.
கடந்த 2003 ஆம் வருடத்திலிருந்து இலவச கழிவறை கட்டித்தர வேண்டுமென்று பலமுறை நகராட்சித் தலைவரிடம் மனு கொடுக்கப்பட்டது. பகுதி மக்களுடன் நேரில் சென்று கோரிக்கையும் வைக்கப்பட்டது. ஆனால் பலன் ஒன்றும் இல்லை.
ஒருபுறம் உழைக்கும் மக்கள் பிரச்சினையை மயிருக்குச் சமமாக நினைக்கும் மதுரவாயல் நகராட்சி, மனுக்களையும், கோரிக்கைகளையும் குப்பையில் வீசி எறிந்து விட்டது. மறுபுறம், அருகிலுள்ள V.G.P. குடியிருப்பு, 'மேட்டுக்குடி' முதலாளிகளுக்கு காற்று வாங்கவும், உடற்பயிற்சி செய்யவும், அழகிய பூங்காவை அவர்கள் கேட்காமலேயே அமைத்துக் கொடுத்து வர்க்க பாசத்தோடு நடந்து கொள்கிறது.
இப்படிப்பட்ட ஆட்சியாளர்களின் தடித்த தோலுக்கு உறைக்கும் வகையில்தான் 2004-ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில் மலம் கழிக்கும் போராட்டத்தை அறிவித்தோம். அறிவிப்பைக்கண்டு அரண்டு போன நகராட்சித் தலைவர் 6 மாதத்தில் கழிவறை கட்டித் தருவதாக உறுதியளித்தார். காலம் ஓடியது, தேர்தலும் நடந்தது, நகராட்சித் தலைவரும் மாறினார். ஆனால், இப்பகுதியில் அவலம் மட்டும் இன்னும் மாறவே இல்லை.
இதற்கெல்லாம் காரணம் என்ன?
சாலைகளை அகலப்படுத்த வேண்டுமென்றால் யாரையும் கேட்காமலேயே சாலை ஓரத்திலுள்ள வீடு, கடைகளை இடித்து தேவையான இடத்தை எடுத்துக்கொள்ளும் நகராட்சிக்கு பிள்ளையார் கோவில் தெரு பகுதியில் கழிவறை கட்ட மட்டும் இடம் இல்லையா? மக்களிடம் கட்டாயமாக வரி வசூலித்து சம்பளம், கார், டெலிபோன் வசதி, நகராட்சி கூட்ட செலவு என்று மக்கள் பணத்தை லட்சக்கணக்கில் வீணடிக்கும் நகராட்சியில் பணம்தான் இல்லையா? இதுவல்ல காரணம்.
உண்மை என்ன தெரியுமா?
தனியார்மயம்-தாராளமயம்-உலகமயம் என்ற நாசகார கொள்கைகளை ஏற்றுக் கொண்டு, 'காட்ஸ்' என்ற ஒப்பந்தத்தை அனைத்து ஓட்டுக் கட்சிகளும் கொண்டு வருகின்றன. அதனால்தான் கல்வி, மருத்துவம், சுகாதாரம், குடிநீர், கழிவறை உள்ளிட்ட அனைத்து சேவைகளும் இன்று நம் போற உழைக்கும் மக்களுக்கு மறுக்கப்படுகின்றன. சேவைகள் அனைத்தும் லாபகரமான தொழிலாக மாற்றப்பட்டு வருகின்றன.
எனவேதான் இந்த அரசுகள் நகராட்சிகள் மூலம் கழிவறை கட்டுவதற்கான நிதி ஒதுக்கீட்டை படிப்படியாகக் குறைக்கின்றன. சுலாப் இண்டர்நேஷனல் என்ற கட்டணக் கழிப்பறைகளை அனுமதிக்கின்றன. எனவே ஆட்சியாளர்களின் பொய் வாக்குறுதிகளை நம்புவதில் பயன் இல்லை. வீதியில் இறங்கி போராடினால் மட்டுமே நமது பிரச்சினைகளை தீர்த்துக் கொள்ள முடியும்.
அத்தகைய போராட்டங்களால் மட்டுமே ஆட்சியாளர்களை பணிய வைக்கவும் முடியும் என்பதற்கு நமது பகுதிக்கு அருகிலுள்ள பாடிக்குப்பம் மக்கள் தொடர்ச்சியாகப் போராடி இலவச கழிவறை பெற்றுள்ளது முன்னுதாரணமாகும். அவர்கள் வழியில் நாமும் உறுதியாகப் போராடுவோம். கோரிக்கையை வென்றெடுப்போம். நிறுத்தி வைத்த மலம் கழிக்கும் போராட்டத்தை நடத்திடுவோம். "நம்முடைய வேதனைகள் நகராட்சிக்குத் தெரிய வேண்டுமென்றால் அதை அவர்களும் அனுபவிக்க வேண்டும்" என்ற வகையில் மதுரவாயல் நகராட்சி அலுவலகத்தைப் "பீ"க் காடாக்குவோம்!
மலம் கழிக்கும் போராட்டம்
04-06-2007
காலை 5.30 மணி மதுரவாயல் நகராட்சி அலுவலகம்
RSYF புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி சென்னை.
தொடர்புக்கு
வ.கார்த்திகேயன் நெ.1 பிள்ளையார் கோவில் தெரு, மதுர வாயல் சென்னை-95 செல்: 944516625