|
நாகை சிவா
|
உகாண்டா கிழக்கு ஆப்பிக்கா நாடுகளில் ஒன்று, முற்றிலும் நிலப்பரப்பால் கவரப்பட்ட குடியரசு நாடு.(Landlocked Republic). அந்நாட்டில் கிட்டதட்ட 20% நிலம் நீரால் சூழப்பட்டுள்ளது. அதனை சுற்றி இருக்கும் நாடுகள் கென்யா, சூடான், காங்கோ, தன்ஜானியா, ரூவாண்டா ஆகியவையாகும்.
1890 முன்பு வரை உகாண்டா நான்கு அரசு ராஜ்ஜியங்களாலும், பல குறு நில மன்னர்களாலும் ஆளப்பட்ட நாடு. 1890 ஆம் ஆண்டு ஆங்கிலேயர்களால் அடிமைப்படுத்தப்பட்டது. 1962 ஆம் ஆண்டு சுகந்திரம் அடைந்தது.
ஆங்கிலம் மற்றும் லுகாண்டா(Luganda) மொழிகள் அந்நாட்டின் ஆட்சி மொழிகள் ஆகும். அனைவருக்கும் ஒரளவுக்கு ஆங்கிலம் தெரிந்து இருக்கிறது. விளம்பர பலகைகள் எல்லாம் பெரும்பாலும் ஆங்கிலத்தில் தான் எழுதப்பட்டுள்ளது.
1970 ஆம் ஆண்டு வரை உகாண்டா, ஆப்பிரிக்க நாடுகளில் மிக அதிகமான சுற்றுலா பயணிகளை கவர்ந்த நாடுகளில் ஒன்று ஆகும். கிட்டதட்ட வருடத்திற்கு 150,000 பயணிகள் பயணம் செய்து உள்ளார்கள். ஆனால் 1997 ஆம் ஆண்டில், பல வருடங்களாக நடைப்பெற்ற உள்நாட்டு பிரச்சனை காரணமாகவும், பிறகு கிட்டதட்ட 12 வருடங்கள் உள்நாட்டில் வளர்ச்சி பணிகள் செய்தும் வெறும் 4000 நபர்கள் வருடத்திறகு வந்து சென்ற சுற்றுலா பயணிகள் ஆவார்கள். இந்த தொய்வை சரிப்படுத்து பல இடங்களில் தனியார் நிறுவனங்களை உள்ளே அனுமதித்தும், பாதுகாப்புகளை பலப்படுத்தியும் சுற்றுலாவை வளர்க்க அந்நாடு பெருமுயற்சி எடுத்து அதில் ஒரளவு வெற்றியும் அடைந்து வருகிறார்கள்.
உகாண்டாவில் வாகனங்கள் அனைத்தும் நம் நாட்டை போலவே இடது பக்கத்தில் தான் செல்கின்றது.

உகாண்டாவில் 1000 வகைகளுக்கும் மேலான பறவை வகைகள் உள்ளன, அது மட்டும் இல்லாமல் 1000 வகைகளுக்கு மேற்ப்பட்ட வண்ணத்துப்பூச்சிகளுக்கு இந்த நாடு தான் தாய்நாடு. மலை வாழ் கொரில்லாக்கள், அரிய வகை குரங்குகள் எல்லாம் மிக அதிகமாக காணப்படும் நாடுகளில் இதுவும் ஒன்று. இது போக கூட்ட கூட்டமாக சிங்கம், சிறுத்தை, யானை, ஒட்டகசிவிங்கி இன்னும் பல பல விலங்குகள் உள்ள நாடு. ஆப்பிரிக்க நாடுகளில் வேறு எங்கும் காண முடியாத பல உயிரனங்கள் காண கிடைக்கும் அற்புத நாடு இது.
ஆப்பரிக்க நாடுகளிலே மிக பெரிதான நல்ல நீர் ஏரியான விக்டோரியா ஏரி(Fresh Water Lake) இங்கு உள்ளது. மேலும் இது சரியாக இக்குவேட்ர்(Equator) மேல் அமைந்து உள்ளது. சில படகோட்டிகள் உங்களுக்கும் மிக சரியான இடத்தை காட்டுவார்கள். ஜி.பி.எஸ்.(GPS) இருந்தால் சரி பார்த்து கொள்ளலாம்.
விக்டோரியா ஏரியின் சில பகுதிகளில் நீர் யானைகளை காண முடியும். ஒரே நேரத்தில் 60 கிலோ புல்லை உட்கொள்ளும் திறமை வாய்ந்தது நீர் யானை என்பது நாம் அனைவரும் அறிந்த ஒன்று தான்.
"சர்ச்சில்" அவர்களால் ஆப்பிரிக்காவின் முத்து(Pearl of Africa) என்ற அடைமொழியால் அழைக்க பெற்ற நாடு உகாண்டா.
இங்கு வாழும் மக்களில் மூன்றில் இரண்டு சதவீதத்துக்கும் அதிகமான மக்கள் கிறிஸ்துவ மதத்தை சார்ந்தவர்கள். ரோ.க - 33 %, போரோ - 33 %, 16 % மூஸ்லிம் மீதம் உள்ள 18 % பிற மதத்தவர்கள் அல்லது சொந்த நம்பிக்கை உடையவர்கள்(Indigenous Beliefs).(புள்ளி விபரங்கள் சிறிது முன் பின் இருக்கலாம்). உலகில் ஏழே இடங்களில் இருக்கும் பஹாய் சமய வழிப்பாடு தளங்களில் ஒன்று உகாண்டாவின் தலைநகரம் கம்பாலாவில் அமைந்து உள்ளது.
உகாண்டாவின் முக்கிய உணவு என்று பார்த்தால் மெதுவான ஸ்கரட்ச்யில் பீன்ஸ் மற்றும் மாமிசம் வைத்து தருவார்கள். பெரும்பாலும் மாட்டு கறி, ஆட்டுக்கறி(Goat) மற்றும் மட்டன்(Sheep). பல வகையான பழங்கள் மற்றும் காய்கறிகளும் இங்கு கிடைக்கும். எல்லா இடத்திலும் பியர் கிடைக்கும். அனைவரும் விரும்பி குடிப்பது பியர் தான். POMBE என்று வாழைக்காயை வைத்து செய்யப்படும் பியரும், WARAGI என்று மில்லட்(Millet) கொண்டு செய்யப்படும் சாராயமும் இந்த நாட்டின் பாரம்பரிய பானம் ஆகும்.இது போக அனைத்து வகையான வெளிநாட்டு பானங்களும் கிடைக்கும்.
உகாண்டாவின் கரண்ஸி உகாண்டா ஸெலிங் ஆகும் (Uganda Shilling - USH). அமெரிக்க டாலர்கள் எல்லா இடத்திலும் ஏற்றுக் கொள்ளப்படும், பல இடங்களில் யூரோ மற்றும் பவுண்டும் வாங்கப்படும். ஆனால் அந்நாட்டு பணமாக மாற்றி வைத்துக் கொள்வது நல்லது. நான் போய் இருந்த போது ஒரு டாலருக்கு 1650 உ.ஸெலிங் தந்தார்கள். விமான நிலையத்திலே மாற்றிக் கொளவது நல்லது. மற்ற இடங்களில் குறைந்த அளவே தருகின்றார்கள். 2000 ஆண்டிற்கு முன் உள்ள டாலர்களுக்கு 1400 ஸெலிங் தான் தருகின்றார்கள். அதனால் சற்று கவனமாக இருப்பது நலம்.
|