|
கஜந்தி
|
ஈழத் தமிழ் நாட்டில்
இனக்கொலை வெள்ளத்தில்
ஏகுகின்ற உயிர்களே!
ஒருகணம் நில்லுங்கள்!
வாழத் தோதில்லாமல்
வாட்டுகின்ற கொடுமையிலே
வதைபடும் வரலாறு
என்றைக்கு நிற்குமோ?
மாளத்தான் முன்னின்று
மரணத்தை துச்சமென்றெண்ணி
ஈழத்து மைந்தர் செய்யும்
ஈகம் தான் கொஞ்சமா?
மீளத்தான் வழிசொல்லார்
மேலும் வாசைபாடுவதை
காலந்தான் நிறுத்துமா?
கண்ணீர்க் கதை மாறுமா?
|