இந்த வாரம்

முகப்பு
குழந்தைகள்
கலைக்கூடம்
இலக்கியம்
நிகழ்வுகள்
அரசியல்
அறிவியல்
துணுக்குகள்
சுற்றுலா
மெய்பேணல்
பொருளாதாரம்
விளையாட்டு
செய்தி விமர்சனம்
நிர்வாகம்
அசைபடங்கள்
மொழி
வாழ்க்கை
சமூகம்
இணையம்
மண(ன) முறிவும் மற்றையவும் - 2 Print E-mail
பத்மா அர்விந்த்   

விவாகரத்துக்கான காரணங்களை அலசும் முன் திருமணங்கள் எப்படி நடக்கின்றன என்பதை பார்ப்போம். நம் ஊர் திருமணங்களைப் பற்றி முன்பே பல பதிவுகளாக எழுதிவிட்டபடியால், அமெரிக்க திருமணங்களைப் பற்றி ஒரு மேலோட்டம். லாஸ்வேகாஸ் திருமணங்கள், ஹாலிவுட் திருமணங்கள் இதில் சேர்த்தி இல்லை.

நம் ஊரில் மட்டும் இல்லை இங்கேயும் திருமணம் நிறைய திட்டமிட்டே பல எதிர்பார்ப்புகளோடு நிகழ்கிறது. வாழ்நாளில் சேமித்த உழைப்பு செலவிடப்பட்டும் மிக விமரிசையாக அரங்கேறுகிறது. பெண் வீட்டினரே பெரும்பாலான செலவைச் செய்கிறார்கள், தேனிலவுக்கான பயணம் உள்பட. திருமணத்திற்கு முதல் நாள் மாலை நடக்கும் ரிகர்சல் ஒத்திகைத் திருமணச் செலவை சில சமயம் பிள்ளை வீட்டார் ஏற்பதுண்டு. மற்றபடி மேசைகளில் வைக்கும் சின்ன சின்ன பரிசுப்பொருள் (நாம் வைத்துக்கொடுப்பது போல) முதல் மணமகனும் மணமகளும் திட்டமிட்டு நல்ல முறையில் நடக்க வேண்டுமே என்று கவலைப்பட்டு யார் மனமும் புண்படாமல் ஒரு மணமகள் தோழன், தோழியை தேர்ந்தெடுத்து அப்பாவின் இரண்டாம் மனைவியை அழைத்தால் அம்மா மனம் வருந்துவாரா என்றெல்லாம் கவலைப்பட்டு நடத்தி எந்த பயனும் இல்லாத, மிக மேலோட்டமான ரத்து செய்வார்களா? சற்றே சிந்தித்துப்பாருங்கள்.இந்தக் காரணங்கள் எப்படி வருகின்றன என்பதை விவாகரத்து வழக்குகளின் அடிப்படையைப் பார்க்கும் போது காணலாம்.

என் அலுவலக சக ஊழியர் பெண் சமீபத்தில் திருமணம் நிச்சயமானது. நிச்சயதார்த்த விழாவிற்கே நிறைய செலவாகிவிட்ட படியால், இப்போது திருமணத்திற்காக பொருள் சேர்க்க பகுதி நேர வேலையும் பார்க்க ஆரம்பித்திருக்கிறார். மகளுக்கு திருமணம் நிச்சயம் ஆன மகிழ்ச்சி, மணமகன் நல்லவனாக இருக்க வேண்டுமமென்ற கவலை,மணமகனை பற்றி தெரிந்தவர்களிடம் எல்லாம் விசாரிப்பது என்ற எந்த வகையிலும் நம் ஊர் தந்தைக்கு மாற்றானவர் இல்லை. இப்போதெல்லாம் பெண்களும் வேலைக்கு போய் பொருள் ஈட்டுவதால், தந்தையின் செலவிற்கு தானும் கொடுப்பதும், ஆண்களும் தேனிலவு போன்ற செல்வை பகிர்ந்து கொள்வதுமாய் மாற்றங்கள் நடந்து கொண்டுதான் இருக்கின்றன.

தனக்கு வாடகை கார் ஏற்பாடு செய்யவில்லை, பார்ட்டி ஃவெவர் எனப்படும் பரிசு சரியாக இல்லை (நான் கொடுத்த பரிசு 100$, அவர் திருப்பி தந்தது எங்கோ ஒரு டாலர் கடையில் இருந்து) என்பது போன்ற சண்டைகளும் உண்டு. முன்பெல்லாம் இங்கேயும் விவாகரத்துகள் அவ்வளாவாய் இல்லை என்பதை கீழ்க்காணும் ஒரு புள்ளியியல் இருந்து தெரிந்துகொள்ளலாம்.
Year Divorces per 1,000 population Year Divorces per 1000 population
1950 ……….. 2.6 1983 ……….. 5.0
1955 ……….. 2.3 1984 ……….. 5.0
1957 ……….. 2.2 1985 ……….. 5.0
1960 ……….. 2.2 1986 ……….. 4.9
1965 ……….. 2.5 1987 ……….. 4.8
1970 ……….. 3.5 1988 ……….. 4.8
1971 ……….. 3.7 1989 ……….. 4.7
1972 ……….. 4.0 1990 ……….. 4.7
1973 ……….. 4.3 1991 ……….. 4.7
1974 ……….. 4.6 1992 ……….. 4.8
1975 ……….. 4.8 1993 ……….. 4.6
1976 ……….. 5.0 1994 ……….. 4.6
1977 ……….. 5.0 1995 ……….. 4.4
1978 ……….. 5.1 1996 ……….. 4.3
1979 ……….. 5.3 1997 ……….. 4.3
1980 ……….. 5.2 1998 ………. 4.2
1981 ……….. 5.3 1999 ………. 4.1
1982 ……….. 5.1 2000 ………. 4.2
1983 ……….. 5.0 2001 ………. 4.0
சின்ன சின்ன கிராமங்களில் இன்னமும் எத்தனை மனசங்கடங்கள் இருந்தாலும், பாவம், சுவர்க்கம் கிடைக்காது என்றும், குழந்தைகளை பார்த்துக்கொள்ள வேண்டுமமென்பதாலும் பயந்து சேர்ந்து வாழ்பவர்கள் உண்டு. ஒரு அரசாங்க வழக்கறிஞர் தன் துணைவியிடம் மிகவும் கொடூரமாக நடந்து கொள்வார். வாயில் துப்பாக்கியை வைத்து கொன்றுவிடுவேன் என்றெல்லாம் பயமுறுத்துவது வழக்கம். சாப்பாடு ஆறிவிட்டால்கூட எலும்புகள் உடையுமாறு அடிப்பதும் உண்டு. ஆனாலும் அந்த பென் கணவனை எதிர்த்து புகாரிடவே முடியவில்லை. முதல்காரணம், எல்லா காவலருக்கும் கணவனை தெரியும், இரண்டாவதாக நல்ல பதவியில் உள்ள கணவனின் வார்த்தைகளுக்கு முன் அவளை நம்ப யாரும் தயாரில்லை, மூன்றாவதாக மற்ற நன்பர்கள் எல்லாரிடமும் மிகவும் நல்ல மனிதன், அன்பானவன் என்று கணவன் பெயரெடுத்திருந்ததும், நல்ல அதிகாரம் உள்ள பதவியில் இருந்ததும், பொது இடங்களில் மிகவும் அன்பாக நடத்தியதும் காரணம், கடைசியாக பல வருடங்களாக கணவன் சொன்ன குற்ற சாட்டுகளை நம்பி, கடைசியில் அந்த பெண்னே தன்னை பற்றி குறைவாக மதிப்பிட்டது. ஒருநாள் எதேச்சையாக வாய்க்குள் வைத்து மிரட்டிய துப்பாக்கி வெடித்து(தவறுதலாக ட்ரிகரை மிகவும் அதிகமாக அழுத்தி பயமுருத்தியது போல செய்யும் போது) இறந்து போனபின் குழந்தைகள் சொன்ன சம்பங்களை பார்த்து பலரும் அதிர்ந்து போனார்கள். அரசாங்க வழக்கறிஞர்கள், காவலர்கள் இவர்கள் மேல் வழக்கு பதிவதென்பது மிகவும் கடினம்.பொய் வழக்குகள் நிறைய வரும், சாலையில் போகும் போது மற்ற காவலரால் வேண்டும் என்றே சின்ன குற்றங்கள் பதிவாக்கப்படும், ட்ரங்கை திறக்க சொல்லி போதை பொருள் போட்டு வழக்கு பதியப்படும் அபாயங்கள் நிறைய உண்டு.

விவாகரத்தில் நிறைய வகைகள் உண்டு. At fault, no fault என்ற இரண்டு பெரிய பிரிவுகள் உண்டு. இரண்டு பேரும் மனம் ஒன்றி விவாகரத்து கோரினாலும் நியுஜெர்ஸியில் 18 மாதங்கள் பிரிந்து இருக்க வேண்டும். இந்த வகைகளைப் பற்றி விரிவாக அடுத்த பதிவில்.

 

http://reallogic.org/thenthuli/?p=234

 
< Prev   Next >

இந்த இதழில்..

தொகுப்பாளரின் மேசையிலிருந்து
ஹிந்து ஆசிரியர் என்.ராமின் பத்திரிக்கையாளர் முகமூடி...
*நட்சத்திரம்* : மொழி ஞாயிறு தேவ நேயப் பாவாணர் !
இந்திய கீரைக்கட்டு (சிறப்புக்கட்டுரை)
ஈழத்துத் தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல்
உள்ளது உள்ளபடி
எனிமி அட் ஹோம் + எலக்சன் அட் ஹோம் ?
ஒரு கணிப்பொறியாளனின் கனவு!!
ஓவியம் ஒன்று
கனவுகளைத் தொலைத்தவள்
கூடைக்குள் தேசம் -01
கூத்தணி ஆட்சி !
கேன்சருடன் ஒரு யுத்தம்
சிங்கப்பூரில் தமிழ் இல்லாத இடம்...
"இலங்கையில் இருக்கிறம்".
பட்டையை கிளப்பும் பாமக அரசியல் பரட்டை அரசியலா?
பரதேசி அரசியல் நடத்தும் பா.ம.க.
பூமி-- 1800 களில்: அமெரிக்க சிவப்பிந்தியத்தலைவரின் பார்வையில்
மென் துறையில் பெண்கள் உப்புக்குச் சப்பாணியா..?
மேமோகிராம்,எஃப்.என்.ஏ.சி.சோதனைகள்
ரஜினியின் வில்லன்கள் சிலரும் காசிமேடு ஆதியும் - எனது பார்வையில்
1996 டிசெம்பர்
வாசகர் எதிர்வினை
*நட்சத்திரம்* : புணரபி மரணம் ! (சிறுகதை)