|
முந்திரி.....உன் பிந்திரி! |
|
|
|
நானானி
|
சென்ற மாதம் ஒரு மினி திருக்கோயில்கள் உலா வந்தோம். மதுரையிலிருந்து என் நாத்தனார் குடுப்பத்தோடு கிளம்பினோம். முதலில் பிள்ளையார்பட்டி, பிறகு சுவாமிமலை.....இதோடு அறுபடை வீடுகளும் பாத்தாச்சு, அப்புரம்
திருமணஞ்சேரி. ஆமா! இத்தெய்வங்களெல்லாம் அழைத்தார்கள். தவறாமல் சென்று தரிசித்தோம்.
அப்படி தரிசனம் முடிந்து வரும் வழியில்
புதுக்கோட்டையிலிருந்து தஞ்சை செல்லும் வழியெங்கும் ஒரே முந்திரிக்காடு. சாலையோரத்தில் சின்னச்சின்ன பந்தல்கள்.
அதனடியில் பெண்கள் என்னவோ செய்துகொண்டிருந்தார்கள். ஆவல்மிக நாங்கள் சென்ற டாக்ஸி டிரைவரிடம் கேட்டேன்.
'முந்திரிப்பருப்பு வறுத்து விக்கிறாங்கம்மா!' என்றார். வண்டியை ஓரமாக நிறுத்திவிட்டு இறங்கி ஒரு பந்தலருகில் சென்று
பார்த்தேன். ஓடு பிரிக்காத முந்திரிக்கொட்டையை இரும்புக்கடாயில் போட்டு அடுப்பில் வறுத்துக்கொண்டிருந்தார்கள்
.இருபெண்கள். மற்றுமிருவர் வறுத்த கொட்டையை சிறு கல் கொண்டு உடைத்து பருப்பை தனியாக எடுத்து பாக் செய்து கொண்டிருந்தார்கள் . பக்கத்தில் ஒரு பெஞ்சில் அரைகிலோ பாக்கெட் பாக்கெட்டாக வறுத்த முந்திரிப்பருப்பு. அங்கேயே டேஸ்ட் பார்க்க நாலைந்து கொடுத்தார்கள். மொறு மொறுவென்று நன்றாக இருந்தது. அத்துடன் கடுகு சைசில் க்ரான்னூல்சாக
கிடைக்கும் முந்திரியும் பாக்கெட்டில் இருந்தது. அது எதற்கு என்றேன். மசாலாக்களில் அரைப்பதற்கு....ஓட்டல்காரர்கள் வாங்கிச்செல்வார்கள்.என்றார்கள். வீட்டு மசாலா என்ன பாவம் பண்ணியது? முழுமுந்திரி இரண்டு கிலோவும் மசாலாவுக்காக தூள் முந்திரி ஒரு கிலோவும் வாங்கிக் கொண்டோம். அவர்களுக்கு ஒரே சந்தோஷம்!
அப்பெண்கள் கொட்டையை உடைக்கும் விதம் பார்த்து எனக்கும் உடைக்கும் ஆசை வந்தது. 'நானும் உடைக்கவா..?'
என்று கேட்டேன். அதற்கு அவர்கள், 'ஐயையோ!!! அம்மா! உங்களால் முடியாது. எங்கள் கைகளைப்பாருங்கள்!' என்று
கைகளை விரித்துக்காட்டினார்கள். கடவுளே!!!! உள்ளங்கைகளெல்லாம் வெந்து புண்ணாகி காய்த்து கருகருவென்றிருந்தன.
கொட்டையை வறுத்து உடைக்கும்போது வெளிவரும் ஒருவகைப் பால் பட்டு கைகள் புண்ணாகிவிடுமாம்!! பாவம்!!
நாம் நெய்யில் வறுத்து பாயசம், மற்ற இனிப்புகளில் சேர்த்தோ அல்லது அப்டியேவோ மொசுக்கும் முந்திரிப்பருப்புக்கு
பிந்திரி உள்ள சிரமங்கள்தான் எத்தனை?
என் காமிரா காரில் வைத்துவிட்டு அங்கு போனதால் படமெடுக்க முடியவில்லை...ரொம்ப வருத்தம் எனக்கு. இனி கழுத்தில் மாட்டிக்கொண்டே செல்வது என்று முடிவெடுத்தேன்.
http://9-west.blogspot.com/2007/07/blog-post_19.html
|