|
சின்னத்தாய் இவள்...(புகைப்படம்) |
|
|
|
த.அகிலன்
|

புகைப்படம் - த.அகிலன்
செஞ்சோலைக் குழந்தைகளைப்படம் பிடிப்பதற்கான முன்னனுமதியுடன் நானும் நண்பர் பகியும்
போயிருந்தோம். எப்படி எப்படியெல்லாம் அந்தக் குழந்தைகளைப் படமெடுக்க வேண்டுமென்று நான் விரும்பினேனோ அப்படியெல்லாம் எடுக்க என்னால் முடியவில்லை.குழந்தைகள் என்னைக் கொமாண்ட் பண்ணின தங்களை நான் எப்படிப் படமெடுக்க வேண்டுமென்று அவர்கள்தான் தீர்மானித்தார்கள்.மாமா இந்தக் குட்டியைஒருக்கா படமெடுங்கொ ஒரு ஓன்றரைவயதுப் பாப்பாவை இடுப்பில் செருகியபடி கேட்டாள் 7 வயது அக்கா சீ 7 வயது தாய். மாமா படமெடுக்கப்போறார் சிரியுங்கோ நான் திணறிப்போனேன் ஏனோ தொண்டை வற்றியது.
- தாயாய் சகோதரியாய் தோழியாய்... கட்டுரையில் இருந்து தொடர்பு கருதி.
http://agiilankanavu.blogspot.com/2007/08/blog-post_07.html
|