|
மின்மினி பூச்சியா? செத்துப்போன தாத்தாவா? |
|
|
|
பிரதாப் குமார் சி
|
மனிதர்களின் மூடநம்பிக்கைகளை வகைப்படுத்தினால் அதற்கு அளவே கிடையாது. எதற்கு எதை சம்பந்தப்படுத்தனுன்னு விவஸ்தையே கிடையாது. கிராமங்களில் பாத்தீங்கன்னா மின்மினி பூச்சியைப் பார்த்தா...வீட்டுல செத்துப்போன தாத்தா வந்திருக்காரு இல்லன்னா செத்துப்போன பாட்டி வந்திருக்கான்னு சின்ன புள்ளைங்ககிட்ட சொல்றதுண்டு.கிராமத்துல மட்டுமில்ல...படிச்ச பலபேர் கூட இந்தமாதிரி சொல்றதை கேட்டிருக்கேன். அவங்களுக்காக இந்த பதிவை சமர்பிக்கிறேன்.
மின்மினிப் பூச்சியிடமிருந்து வெளிச்சம் தோன்றுவது எப்படி?
இது ஒரு சிக்கல் நிறைந்த உயிர்வேதியியல் (bio-chemical) முறையாகும். இம்முறை bioluminescence எனப்படும். மெழுகுவர்த்தி, மின்விளக்கு ஆகியன தரும் ஒளி, வெப்பம் நிறைந்தது. ஆனால் இங்கே வெப்பம் ஏதும் உண்டாவதில்லை. மின்மினிப் பூச்சி தரும் ஒளியில் எரி பொருளாகப் பயன்படுவது லூசி·பெரின் (luciferin) என்ற வேதியியல் கூட்டுப் பொருள். இது பூச்சியின் ஒளியுமிழ் உறுப்பில் (light emitting organ) நிறைந்துள்ளது.
இந்த லூசி·பெரின், லூசி·பெரெஸ் என்ற என்ஸைமில் (enzyme) உள்ள உயிர்வளி (oxygen), உயிரணுக்களில் (cells) நிறைந்துள்ள ATP என்ற வேதியியல் பொருள், மற்றும் மக்னிசியம் ஆகியவற்றுடன் சேரும்போது ஒளி உண்டாகிறது. இவற்றில் ஏதேனும் ஒன்று இல்லாவிடினும் ஒளியுண்டாகாது. மின்மினிப் பூச்சி விட்டுவிட்டு ஒளிர்வதற்குக் காரணம், அதன் ஒளியுமிழ் உறுப்புக்குச் செல்லும் நரம்புத் தூண்டல்கள் (nerve impulses) விட்டு விட்டுச் செல்வதேயாகும்.
Online Dating Tip
http://ushnavayu.blogspot.com/2007/08/blog-post_16.html
|