இந்த வாரம்

முகப்பு
குழந்தைகள்
கலைக்கூடம்
இலக்கியம்
நிகழ்வுகள்
அரசியல்
அறிவியல்
துணுக்குகள்
சுற்றுலா
மெய்பேணல்
பொருளாதாரம்
விளையாட்டு
செய்தி விமர்சனம்
நிர்வாகம்
அசைபடங்கள்
மொழி
வாழ்க்கை
சமூகம்
இணையம்
❒ வலைப்பதிவு என்றால் என்ன? Print E-mail
☆ சிந்தாநதி   

கணினி மற்றும் இணையத்தில் ஆங்கிலம் கோலோச்சிக் கொண்டிருந்த காலத்தில் கணினியில் தமிழ் எழுத முடியும்; அதை இணையத்தில் ஏற்ற முடியும் என்று அறிந்த உடன் பலவேறு எழுத்துருக்களால் அமைந்த இணையதளங்கள் தமிழிலும் உருவாக்கப் பட்டன. பொதுவாக தமிழ் ஆர்வலர் குழுக்கள், செய்தி நிறுவனங்கள் போன்றவையே அத்தகைய தளங்களை உருவாக்கி இருந்தனர். இந்நிலையில் யாகூ நிறுவனத்தின் geocities சேவையும் அது போன்ற சில சேவைகளும் இலவசமாகவே தளங்களை உருவாக்க வாய்ப்பு அளித்தன. எனவே ஏராளமான தனிநபர்களும் தங்களுக்கான இணைய தளங்களை உருவாக்கி தங்களைப் பற்றிய தகவல்களைப் பதிந்து வைத்தனர்.

தொடர்ந்து blogs எனப்படும் இணைய டைரிக் குறிப்புகள் புழக்கத்துக்கு வந்தன. ஆரம்பத்தில் blogdrive, livejournal போன்ற சேவைகள் பிரபலமாக இருந்தன. ஆங்கிலத்தில் blog எழுதிக் கொண்டிருந்த தமிழர்களில் சிலர் 2002 ஆண்டு வாக்கில் தமிழிலும் எழுத முற்பட்டனர். தொடர்ந்து தமிழில் நிறைய பிளாக்குகள் உருவாக தொடங்கின. blogger.com நிறுவன சேவை எளிமையாக கையாளக் கூடியதாகவும் இருந்ததால் பெரும்பாலானாவர்கள் அதையே விரும்பி செயல்படுத்தினர்.

அந்த காலகட்டத்தில் தமிழ் ஆர்வலர்களிடையே பிரபலமாக இருந்த யாகூ குழுமங்களில் திஸ்கி எழுத்துருவே பயன்படுத்தப் பட்டிருந்தது. ஆனால் நேரடியாக ஆங்கிலத்தில் இருந்து தமிழில் எழுத வந்ததாலோ என்னவோ பிளாக்கர்கள் யூனிகோடு குறிமுறையை பயன்படுத்தினர்.

ஆரம்ப பதிவர்கள் பிளாக்குகளை தமிழில் வலைப்பூ என்றும் வலைப்பதிவு என்றும் கூற ஆரம்பித்தனர். பின்னர் பெரும்பாலானவர்கள் வலைப்பதிவு என்ற பெயரையே பயன்படுத்தியதால் இன்று பிளாக் என்பது வலைப்பதிவு என்ற பெயராலேயே அறியப் படுகிறது.

பாமினி முதலான தட்டச்சு முறைகளைப் பயன்படுத்திய குழும மடல்களைப் போலன்றி இங்கே (அதே ஆங்கிலத்தில் இருந்து வந்த காரணமாக இருக்கலாம்) ரோமன் தட்டச்சு முறையே பெரும்பாலானவர்களால் பயன்படுத்தப் பட்டது.

சுரதா யாழ்வாணன் நேரடியாக தமிழை ரோமன் முறையில் எழுத ஆன்லைன் எழுதிகளை உருவாக்கினார். கூடவே
வலைப்பதிவு உருவாக்கும்போதே மறுமொழி எழுத அந்த நிரலிலேயே தமிழ் எழுதுகருவியை இணைத்துக் கொள்ளும் விதத்திலான அமைப்பையும் உருவாக்கி அளித்தார்.

இப்படியாக வலைப்பதிவு மூலம் தமிழ் எழுவது எளிமையாக இருப்பதை வாசகர்களாக வந்தவர்கள் உணர்ந்து தாங்களும் எளிதாக வலைப்பதிவுகளை ஆரம்பித்துக் கொண்டனர்.

பிளாக்கர் சேவையைத் தொடர்ந்து வேர்ட்பிரஸ் செயலியில் இயங்கும் weblogs.us என்னும் தளம் வலைப்பதிவு சேவையை அளிப்பது அறிந்து சிலர் அந்த சேவையைப் பயன்படுத்தி வலைப்பதிய ஆரம்பித்தனர். பின்னர் wordpress நிறுவனமே இலவச வலைப்பதிவு சேவையை ஆரம்பித்தது. பலரால் அந்த சேவையும் பயன்படுத்தப் படுகிறது. இவை தவிர இன்னும் நிறைய வலைப்பதிவுச் சேவைகள் இருக்கின்றன. அவையும் பயன்படுத்தப் படுகின்றன.

வலைப்பதிவில் என்ன எழுதப் படுகிறது?

பணிநிமித்தம் அயல் நாடுகளில் வசிக்கும் தமிழர்கள் தங்கள் தமிழ் ஆர்வத்திற்கு ஒரு வடிகாலாகவே வலைப்பதிவுகளை பயன்படுத்த ஆரம்பித்தனர் என்று சொல்லலாம். இது தவிர வலைப்பதிவு என்பது ஒரு மாற்று ஊடகமாகவும் வளர்ந்து வருவதன் காரணமாக தமிழர்களிடையே வலைப்பதிவு ஆர்வமும் வளர ஆரம்பித்தது.

வலைப்பதிவு என்பது தனி இணையதளத்தைப் போலன்றி நேரடியாக வாசகரையும் எழுதுபவரையும் உடனுக்குடன் தொடர்புறுத்தும் ஒரு ஊடகம். வலைப்பதிவில் டைரிக்குறிப்பு போல அன்றாட அனுபவங்களையும் எழுதலாம். கதை, கவிதை,கட்டுரை என படைப்பாக்கமும் செய்யலாம். நிகழ்வுச் செய்திகளை பகிரலாம். திரைப்பட விமர்சனங்கள் செய்யலாம். எழுத்தில் எழுதக் கூடிய எதையும் வலைப்பதிவுகளிலும் எழுதலாம்.

அச்சு ஊடகம் போலன்றி வலைப்பதிவில் என்ன எழுதுகிறோமோ அதை வாசிப்பவர் அந்த நொடியிலேயே படைப்புக்கான விமர்சனத்தை மறுமொழியாகத் தந்து விட முடியும். எனவே வாசகரும் வலைப்பதிவரும் நேரடித் தொடர்பில் இருப்பவர்களாக இருக்கின்றனர். விரைவிலேயே வாசகரும் வலைப்பதிவராக மாறிவிடுவார். இவ்வாறு வலைப்பதிவர்களே வாசகர்களாகவும் வாசகர்களே வலைப்பதிவர்களாகவும் இருக்கும் நிலையே பெரும்பாலும் இருக்கிறது. வலைப்பதிவு பற்றி அறிந்து புதிதாக வாசகராகும் ஆர்வலர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது.

இதன்மூலம் தமிழில் எழுதும் ஆர்வமும் திறமையும் வளர்கிறது. இது தவிர web.2.0 போன்ற இணைய வளர்ச்சியால் வலைப்பதிவுகளில் ஒலி, ஒளிக் காட்சிகளையும் காட்சிப் படுத்த முடிகிறது. இது வலைப்பதிவையும் ஒரு முழுமையான பல்லூடகமாக மாற வகை செய்தது.

இதனால் எழுத்துப் படைப்புகள் தவிர புகைப்படப் பதிவுகள், குரல் பதிவுகள், திரைப்பதிவுகள் என வலைப்பதிவுகளில் பன்முகத் திறமைகளுக்கு வாய்ப்பு இருக்கிறது.

தமிழில் வலைப்பதிவு தொடங்க என்ன செய்ய வேண்டும்?

1. முதலில் இணைய வசதியுடன் ஒரு கணினி சொந்தமாக இருப்பது நல்லது.

அல்லது

அலுவலகத்தில் உங்கள் பொறுப்பில் ஒரு கணினி இருந்தாலும் போதும். ;)

அதுவும் இல்லையா?

பரவாயில்லை...! கணினி மையம் ஒன்றில் சிறிது நேரம் செலவிட முடிந்தால் அதுவே போதுமானது.

(தொடரும் பகுதிகளில் நுட்பம் சார்ந்த தகவல்களும் செயல்முறை விளக்கங்களும் வரவிருக்கின்றன.)

http://valai.blogspirit.com/archive/2007/08/17/blogs-in-tamil.html

 
< Prev   Next >

இந்த இதழில்..

தொகுப்பாளரின் மேசையிலிருந்து
ஹிந்து ஆசிரியர் என்.ராமின் பத்திரிக்கையாளர் முகமூடி...
*நட்சத்திரம்* : மொழி ஞாயிறு தேவ நேயப் பாவாணர் !
இந்திய கீரைக்கட்டு (சிறப்புக்கட்டுரை)
ஈழத்துத் தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல்
உள்ளது உள்ளபடி
எனிமி அட் ஹோம் + எலக்சன் அட் ஹோம் ?
ஒரு கணிப்பொறியாளனின் கனவு!!
ஓவியம் ஒன்று
கனவுகளைத் தொலைத்தவள்
கூடைக்குள் தேசம் -01
கூத்தணி ஆட்சி !
கேன்சருடன் ஒரு யுத்தம்
சிங்கப்பூரில் தமிழ் இல்லாத இடம்...
"இலங்கையில் இருக்கிறம்".
பட்டையை கிளப்பும் பாமக அரசியல் பரட்டை அரசியலா?
பரதேசி அரசியல் நடத்தும் பா.ம.க.
பூமி-- 1800 களில்: அமெரிக்க சிவப்பிந்தியத்தலைவரின் பார்வையில்
மென் துறையில் பெண்கள் உப்புக்குச் சப்பாணியா..?
மேமோகிராம்,எஃப்.என்.ஏ.சி.சோதனைகள்
ரஜினியின் வில்லன்கள் சிலரும் காசிமேடு ஆதியும் - எனது பார்வையில்
1996 டிசெம்பர்
வாசகர் எதிர்வினை
*நட்சத்திரம்* : புணரபி மரணம் ! (சிறுகதை)