|
தாசன்
|
இலங்கையில் இருந்து இளையதம்பி தயானந்தாவை ஆசிரியராக கொண்டு இருக்கிறம் என்னும் பெயரில் இருமாத இதழ் ஒன்று வெளிவரத் தொடங்கி உள்ளது.
இலங்கையில் ஜனரஞ்ச இதழ்கள், சிறு சஞ்சிகைகள், பத்திரிகைகள் என வருவது அவை சில பிரசுரங்களுடன் நின்று விடுவது ஒரு சாபக்கேடு. மிகப் பெரிய பத்திரிகை நிறுவனமான வீரகேசரி கூட, 70களில் வெளியிட்டு வந்த வீரகேசரி மாதாந்த நாவலை கூட நிறுத்தி விட்டு இருந்தது இதற்கு மிக சிறந்த உதாரணம்.
எனினும் இருக்கிறம் சற்று நம்பிக்கையோடு வெளி வருவது போல் தெரிகின்றது. இளையதம்பி தயானந்தா இவ்வாறான சில பிரசுரங்களுடன் நின்று விடுவது குறித்து தனது இரண்டாவது இதழில் குறிப்பிட்டு இருப்பது அதற்கான அவரது தயார் படுத்தலை குறிக்கிறது.
விற்பனையை அதிகரிப்பதற்கு முதல் பிரசுரத்தில் “சிவாஜி” ரஜியினின் படத்தையும், இரண்டாவது பிரசுரத்தில் ஐஸ்வர்யா ராயின் படத்தை போடுவதை தவிர வேறு வழிகள் இல்லை என்பதை உணர்ந்திருக்கின்கிறார்.
எனினும் ஆக்கங்களில் சோரம் போகவில்லை. முதல் இதழ் கைவசம் இல்லாத காரணத்தினால் இரண்டாவது இதழில் வந்தவற்றை குறிப்பிடுகின்றேன். த.ஜெயசீலன், கவிஞர் செ.குணரத்தினம், தி.திருக்குமரன் ஆகியோரின் கவிதைகளும். கிண்ணியா அமீர் அலி, சரவணன், அமிர்தகழியான், ஆகியோரின் சிறுகதைளும், கே.எஸ். பாலச்சந்திரனின் வானொலி கால நினைவுகள், பனையடிப்பக்கம், சோக்கெல்லோ சண்முகத்தின் பட்சமுள்ள ஆச்சிக்கு என்பன தொடராக வருகின்றன. பசீனா சலீம், பிரபா ஆகியோரின் கட்டுரைகளும், ஐஸ்வர்யா ராய் நடித்த provoked திரைப்படம் பற்றிய பார்வையும், ஏராளம் துணுக்களும் வந்திருக்கின்றது.
பக்க வடிவமையிலும் அசத்தி இருக்கின்றார்கள். அனைத்தும் வர்ணபக்கங்களில் வந்திருக்கிறது.அறிமுக விலை 40 இலங்கை ரூபாய்கள்.
இரண்டாவது இதழில் சக பதிவரான தமிழ்நதியின் வாசகர் கடிதமும் வந்திருக்கிறது.
மேலதிக விபரங்கள்
ஆசிரியர்
இளையதம்பி தயானந்தா
நிர்வாக ஆசிரியர்
மனோ ராஜசிங்கம்
ஆசிரியர் குழு
எஸ்.ரஞ்சகுமார்
சாந்தி சச்சிதானந்தம்
அப்துர் ரகுமான்
வ.சிவஜோதி
தொடர்புக்கான முகவரி
3டொரிங்டன் அவனியூ
கொழும்பு-07 .
தொலைபேசி
0094602150836
http://thasanonline.blogspot.com/2007/08/blog-post_18.html
|