|
சு.முரளிதரன்
|
01
கூடையைக் கனக்க
கனக்கச் சுமந்து சென்றார்கள்
உள்ளே இந்த தேசம்.
02
காரிருள் சப்தத்தில்
காதுகளிரண்டையும் வைத்தேன்
எத்தனை கவிதைகள்!
03
சங்கக் கூடுகள் அப்படியே
இருக்க – ஆவிகள் இடம் மாறின
இன்னும் சங்கச் சண்டை.
04
ஆயுள் முழுவதும் அந்த
ஏழைக்காகவே வாழ்ந்திருந்தது
இதயம்.
05.
எங்களுர் பள்ளம்
பக்கத்தூரின் மண் நிரப்பியது
அங்கே இப்போ பள்ளம்.
http://muralitharanlive.blogspot.com/2007/08/01.html
|