|
கோவி.கண்ணன்
|
கொள்கை (முரண்பாடு)களால் எந்தக் கட்சிக்கும் பொதுமக்கள் முதன்மைத்துவம் கிடைக்காத நிலமை தற்பொழுதைய காலகட்டங்களில் இந்திய அளவிலும், கூட்டணி ஆட்சி நடைமுறை(யற்று ?) நடந்துவருகிறது. ஆண்டிகள் கூடி மடம் கட்டினால் அது கனவுகளில் மட்டுமே நடக்கும். அது கனவு மட்டுமின்றி செயல்படுவது போலத்தான் இங்கு பல்வேறு முரண்(பட்ட) கட்சிகள் ஒன்று சேர்ந்து கூட்டணி ஆட்சி என்ற பெயரில் ஆட்சி நடத்துகின்றன.
கூட்டணி ஆட்சியால் ஆட்சி கவிழ்ப்பு நடந்து பல முதல்வர்கள் மாற்றப்பட்ட கேலிக் கூத்துகள் அண்டை மாநிலம் கர்நாடகாவில் பார்த்துவருகிறோம். தமிழக அளவில் எப்பொழுது வெடிக்குமோ என்ற நிலையில் திமுக - பாமக கூட்டனி கூத்துக்கள் ஒரு பக்கம். அனு ஆயுத ஒப்பந்தம் குறித்து உடன்பாடில்ல நிலையில் காங்கிரஸ் - இடது சாரிகள்.
என்ன நடக்குது நாட்டில் ?
கோடிக்கணக்கில் செலவு செய்து நடத்தப்படும் நாடாளுமன்ற கூட்டத்தில் ஒத்திவைப்புத் தீர்மாணங்களால் முடக்கப்பட்டும், எதிர்கட்சிகளுக்கு சவால் விட்டு சட்டையை கிழித்துக்கொண்டு சவால் விடும் ஆளும் கட்சிகள். பாதிக்கப்படுவது மக்கள் செயல் திட்டங்களும் வரிப்பணங்களுமே.
மக்கள் பணி என்பதைத் தாண்டி அரசியல் என்பது லாப நோக்கோடு வளரும் நிறுவணம் என்று பரிமாணம் அடைந்ததின் விளைவாக இதைப் பார்க்க முடிகிறது. லாபம் தரும் தொழில்களில் ஒன்றாக அரசியலும் அதை வெற்றிகரமாக நடத்தும் நிறுவணங்களாக கட்சிகளும், அதை திறமையாக கையாளுபவர்களாக அரசியல் தலைவர்களும் ஆகிவிட்டனர். இவர்களுக்கு தேசியபாதுகாப்பு, சட்டப்பாதுகாப்பு என்ற வளையத்துக்குள் இருந்து எதையுமே சாதித்துக் கொள்ள முடிகிறது.
இவ்வளவு சீர்கேட்டையும், முரண்பாடுகளையும் வைத்துக் கொண்டு தேசிய கொடி ஏற்றிவைத்து இவர்கள் ஆற்றும் உரையென்பது இவர்களின் செஞ்சோற்றுக் கடனாகத்தானே நினைக்க முடிகிறது.
வேற்றுமையில் ஒற்றுமை காண்கிறார்களாம்...இதன் பெயர் கூட்டனி ஆட்சியாம். திருட்டு பணத்தை பங்கு பிரிக்கும் திருடர் கூட்டனிக்கும் இவர்களுக்கும் என்ன வேறுபாடு ?
மக்கள் நலம் ? மண்ணாங்கட்டி !!!
சாகும் முன் சம்பாதிப்போம் வரையறையின்றி தலைமுறைகளைத்தாண்டி அவை தம் குலம் காக்கும் ! என்ற கொள்கையில் இருந்து கொண்டு செய்யும் இவர்கள் கூட்டணி கூட்டணியா ? கூத்தணி !
போங்கடா, நீங்களும் நீங்கள் பேசும் மக்கள் நலனும்.
இதையும் தாண்டி அரசியல் கட்சிக்கு ஆதரவாக பேச முடிந்தால் ? அது
'எரிகிற கொள்ளியில் எந்த கொள்ளி நல்ல கொள்ளி ?' என்ற பழமொழிதான்
மக்கள் ஆட்சி தத்துவங்கள் மரணித்துப் போகும் காலங்கள் விரைவில் வந்துவிடும் போல் தெரிகிறது
http://govikannan.blogspot.com/2007/08/blog-post_19.html
|