இந்த வாரம்

முகப்பு
குழந்தைகள்
கலைக்கூடம்
இலக்கியம்
நிகழ்வுகள்
அரசியல்
அறிவியல்
துணுக்குகள்
சுற்றுலா
மெய்பேணல்
பொருளாதாரம்
விளையாட்டு
செய்தி விமர்சனம்
நிர்வாகம்
அசைபடங்கள்
மொழி
வாழ்க்கை
சமூகம்
இணையம்
கூத்தணி ஆட்சி ! Print E-mail
கோவி.கண்ணன்   

கொள்கை (முரண்பாடு)களால் எந்தக் கட்சிக்கும் பொதுமக்கள் முதன்மைத்துவம் கிடைக்காத நிலமை தற்பொழுதைய காலகட்டங்களில் இந்திய அளவிலும், கூட்டணி ஆட்சி நடைமுறை(யற்று ?) நடந்துவருகிறது. ஆண்டிகள் கூடி மடம் கட்டினால் அது கனவுகளில் மட்டுமே நடக்கும். அது கனவு மட்டுமின்றி செயல்படுவது போலத்தான் இங்கு பல்வேறு முரண்(பட்ட) கட்சிகள் ஒன்று சேர்ந்து கூட்டணி ஆட்சி என்ற பெயரில் ஆட்சி நடத்துகின்றன.

கூட்டணி ஆட்சியால் ஆட்சி கவிழ்ப்பு நடந்து பல முதல்வர்கள் மாற்றப்பட்ட கேலிக் கூத்துகள் அண்டை மாநிலம் கர்நாடகாவில் பார்த்துவருகிறோம். தமிழக அளவில் எப்பொழுது வெடிக்குமோ என்ற நிலையில் திமுக - பாமக கூட்டனி கூத்துக்கள் ஒரு பக்கம். அனு ஆயுத ஒப்பந்தம் குறித்து உடன்பாடில்ல நிலையில் காங்கிரஸ் - இடது சாரிகள்.

என்ன நடக்குது நாட்டில் ?

கோடிக்கணக்கில் செலவு செய்து நடத்தப்படும் நாடாளுமன்ற கூட்டத்தில் ஒத்திவைப்புத் தீர்மாணங்களால் முடக்கப்பட்டும், எதிர்கட்சிகளுக்கு சவால் விட்டு சட்டையை கிழித்துக்கொண்டு சவால் விடும் ஆளும் கட்சிகள். பாதிக்கப்படுவது மக்கள் செயல் திட்டங்களும் வரிப்பணங்களுமே.

மக்கள் பணி என்பதைத் தாண்டி அரசியல் என்பது லாப நோக்கோடு வளரும் நிறுவணம் என்று பரிமாணம் அடைந்ததின் விளைவாக இதைப் பார்க்க முடிகிறது. லாபம் தரும் தொழில்களில் ஒன்றாக அரசியலும் அதை வெற்றிகரமாக நடத்தும் நிறுவணங்களாக கட்சிகளும், அதை திறமையாக கையாளுபவர்களாக அரசியல் தலைவர்களும் ஆகிவிட்டனர். இவர்களுக்கு தேசியபாதுகாப்பு, சட்டப்பாதுகாப்பு என்ற வளையத்துக்குள் இருந்து எதையுமே சாதித்துக் கொள்ள முடிகிறது.

இவ்வளவு சீர்கேட்டையும், முரண்பாடுகளையும் வைத்துக் கொண்டு தேசிய கொடி ஏற்றிவைத்து இவர்கள் ஆற்றும் உரையென்பது இவர்களின் செஞ்சோற்றுக் கடனாகத்தானே நினைக்க முடிகிறது.

வேற்றுமையில் ஒற்றுமை காண்கிறார்களாம்...இதன் பெயர் கூட்டனி ஆட்சியாம். திருட்டு பணத்தை பங்கு பிரிக்கும் திருடர் கூட்டனிக்கும் இவர்களுக்கும் என்ன வேறுபாடு ?

மக்கள் நலம் ? மண்ணாங்கட்டி !!!

சாகும் முன் சம்பாதிப்போம் வரையறையின்றி தலைமுறைகளைத்தாண்டி அவை தம் குலம் காக்கும் ! என்ற கொள்கையில் இருந்து கொண்டு செய்யும் இவர்கள் கூட்டணி கூட்டணியா ? கூத்தணி !

போங்கடா, நீங்களும் நீங்கள் பேசும் மக்கள் நலனும்.

இதையும் தாண்டி அரசியல் கட்சிக்கு ஆதரவாக பேச முடிந்தால் ? அது

'எரிகிற கொள்ளியில் எந்த கொள்ளி நல்ல கொள்ளி ?' என்ற பழமொழிதான்

மக்கள் ஆட்சி தத்துவங்கள் மரணித்துப் போகும் காலங்கள் விரைவில் வந்துவிடும் போல் தெரிகிறது

http://govikannan.blogspot.com/2007/08/blog-post_19.html

 
< Prev   Next >

இந்த இதழில்..

தொகுப்பாளரின் மேசையிலிருந்து
ஹிந்து ஆசிரியர் என்.ராமின் பத்திரிக்கையாளர் முகமூடி...
*நட்சத்திரம்* : மொழி ஞாயிறு தேவ நேயப் பாவாணர் !
இந்திய கீரைக்கட்டு (சிறப்புக்கட்டுரை)
ஈழத்துத் தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல்
உள்ளது உள்ளபடி
எனிமி அட் ஹோம் + எலக்சன் அட் ஹோம் ?
ஒரு கணிப்பொறியாளனின் கனவு!!
ஓவியம் ஒன்று
கனவுகளைத் தொலைத்தவள்
கூடைக்குள் தேசம் -01
கூத்தணி ஆட்சி !
கேன்சருடன் ஒரு யுத்தம்
சிங்கப்பூரில் தமிழ் இல்லாத இடம்...
"இலங்கையில் இருக்கிறம்".
பட்டையை கிளப்பும் பாமக அரசியல் பரட்டை அரசியலா?
பரதேசி அரசியல் நடத்தும் பா.ம.க.
பூமி-- 1800 களில்: அமெரிக்க சிவப்பிந்தியத்தலைவரின் பார்வையில்
மென் துறையில் பெண்கள் உப்புக்குச் சப்பாணியா..?
மேமோகிராம்,எஃப்.என்.ஏ.சி.சோதனைகள்
ரஜினியின் வில்லன்கள் சிலரும் காசிமேடு ஆதியும் - எனது பார்வையில்
1996 டிசெம்பர்
வாசகர் எதிர்வினை
*நட்சத்திரம்* : புணரபி மரணம் ! (சிறுகதை)