இந்த வாரம்

முகப்பு
குழந்தைகள்
கலைக்கூடம்
இலக்கியம்
நிகழ்வுகள்
அரசியல்
அறிவியல்
துணுக்குகள்
சுற்றுலா
மெய்பேணல்
பொருளாதாரம்
விளையாட்டு
செய்தி விமர்சனம்
நிர்வாகம்
அசைபடங்கள்
மொழி
வாழ்க்கை
சமூகம்
இணையம்
கனவுகளைத் தொலைத்தவள் Print E-mail
நந்தா   

மனது கனத்துப் போய் கிடந்தது. சென்னையிலிருந்து கிளம்பிய போது இருந்த உற்சாகமும், ஆர்வமும் சுத்தமாய் காணாமல் போய் இருந்தது.என்னென்னவோ எதிர்பார்ப்புகளுடன் கிளம்பி வந்திருந்தேன். அவளிடம் என்னென்னவோ கேட்க வேண்டும். இடைப் பட்ட இந்த மூன்று வருடங்களில் நடந்த பல விஷயங்களை சொல்ல வேண்டும் என்று கங்கணம் கட்டிக் கொண்டு கிளம்பினேன். ஆனால் மனம் இப்போது பொம்மையைத் தொலைத்த குழந்தையைப் போல சோர்ந்துப் போய்க் கிடந்தது.

இத்தனைக்கும் அவள் சந்தோஷமாய்த்தான் இருக்கிறாள். இங்க பார்த்தியா அவரு என் பிறந்த நாளுக்கு வாங்கிக் கொடுத்தது என்று ஒரு சிகப்புப் புடவையைக் காட்டி சிரித்துக் கொண்டுதான் இருக்கிறாள். ஒரு வேளை நான்தான் தேவை இல்லாமல் மனதைப் போட்டுக் குழப்பிக் கொள்கிறேனோ? தப்பு தப்பாய் நான்தான் கற்பனை பண்ணிக் கொள்கிறேனோ?

சார் டிக்கெட். கண்டக்டரின் குரல் என்னை அவர் பக்கம் திருப்பியது.

சென்னை ஒண்ணு கொடுங்க.

சில்லறை பரிமாற்றங்களுக்குப் பின் மீண்டும் இருக்கையில் சாய்ந்து கொண்டேன். தூக்கம் வர மறுத்தது. ஜன்னலின் வழியே தெரிந்த பெயர் தெரியாத மரங்களோடு என் நினைவுகளும் பின்னோக்கிப் போனது.

கல்லூரியில் படிக்கின்ற காலத்தில் நானும் அவளும் மிக நெருங்கிய நண்பர்கள். ஒரு சிலர் எங்களை காதல்ர்கள் என்றும், ஒரு சிலர் நாங்கள் கடலை போடுகிறோம் என்றும், வெகு குறைவான சிலர் மட்டும் எங்களை நண்பர்கள் என்றும் சொல்லுவார்கள். ஆனால் நாங்கள் இதைப் பொருட் படுத்தியதில்லை.

ஒரு சிலரைப் பார்த்த உடன் நமக்கு ரொம்பப் பிடித்துப் போய் விடும். எவ்வளவு யோசித்தாலும் அதற்கான காரணமும் நம்மால் கண்டு பிடிக்க முடியாது.அப்படி எந்த வித காரணங்களும் இல்லாமலே எனக்கு அவளையும், அவளுக்கு என்னையும் பிடித்துப் போனது.

கல்லூரியில் படித்த அந்த நான்கு வருடங்களில், அவள் என்னை ரொம்பவுமே ஆச்சர்யப் படுத்தினாள். சர்வ சாதாரணமாக பேசிக்கொண்டிருக்கும் போதே பல தகவல்களை சொல்லிவிட்டுச் செல்வாள்.

வருடங்களையும், நாட்களையும் அவள் எப்படி மறக்காமல் வைத்திருக்கிறாள் என்று இன்று வரை யோசித்துக் கொண்டிருப்பேன். இன்னிக்கு என்ன நாள் தெரியுமா. ஏப்ரல் 30. ஏறக்குறைய பதினாறு வருடம் வியட்நாமில் நடை பெற்ற அந்த கோரமான போர் முடிவுக்கு வந்த நாள் இன்று என்பாள்.

அப்படி அவள் எனக்குள் ஏற்படுத்திய பிரமிப்புகள் ஏராளம். அவள் என்னிடம் “ஏதாவது சாதிக்கணும்டா. நானும் பொறந்தேன், வாழ்ந்தேன்னு இல்லாம, நம்ம பேரை சொல்ற மாதிரி ஏதாவது சாதிக்கணும்டா” என்று அடிக்கடி சொல்லுவாள். சும்மா ஒரு லட்சியமுமே இலாமல் சுற்றிக் கொண்டிருந்த என்னை யோசிக்க வைத்தவள் அவள்தான்.

நான் ஓரளவு கவிதை எழுதுவேன். 10 கவிதைகள் எழுதினால், 2 சூப்பரா இருக்கும். 4 சுமாராதான் இருக்கும். 4 மோசமா இருக்கும். முகத்திற்கு நேராக என் பல கவிதைகளை குப்பை மாதிரி இருக்கு என்று சொல்லி இருக்கிறாள்.

நான் முகம் வாடுவதைப் பார்த்து, கோவிச்சுக்காதடா, உண்மையிலேயே எனக்கு அப்படித்தான் தோணுது. நான் சொல்றதையே தாங்கிக்க முடியலைன்னா, வேற யாராவது சொன்னா எப்படி தாங்கிப்ப. வெறுமனே எண்ணிக்கைகளுக்காக கவிதை எழுதறதை நிறுத்து முதல்ல, என்று என் தலையில் குட்டி சொல்லிக் கொடுத்தவள் அவள்தான்.

அந்த நான்கு வருடங்களில், பல்வேறு சமயங்களில் எங்களுடைய விருப்பு வெறுப்புகளை, கனவுகளை பகிர்ந்துக் கொண்டிருக்கிறோம். ஏதோ ஒரு காரணத்திற்காக, அவளைத் தவறாய் ஒருவன் பேசியதை என்னிடம் சொல்லி வாய் விட்டு கதறி அழுதிருக்கிறாள். அவளது அழுகை, ஆனந்தம், கோபம், கிறுக்குத் தனங்கள், சென்டிமென்ட்ஸ் எதுவுமே எனக்கு பரிச்சயமற்றவை அல்ல. ஒரு தோழனாய் எல்லாவற்றையும் உணர்ந்திருக்கிறேன்.

உண்மையான நட்பிற்கு நாங்கள்தான் இலக்கணமாய் இருப்பதாய் எங்களுடைய ஒவ்வொரு கணங்களையும் கழித்திருந்திருக்கிறோம். ரொம்ப மெச்சூரிட்டியாய் நடந்துக் கொள்வதாய் மனதுக்குள்ளேயே நினைத்திருந்திருக்கிறோம். ஆனால் நாங்கள் அந்த வயதில் புரிந்துக் கொள்ளாதது ஒன்று இருந்தது. அது “காலம் எங்களை எப்படியும் பிரித்துப் போட்டு விடும் என்பதே“.

ஆச்சு. நான்கு வருடங்கள் வெகு வேகமாய் ஓடி விட, வேலை தேடி சென்னை வந்து சேர்ந்தோம். நான் என் ஃப்ரண்ட்ஸோடு ஒரு மேன்சனிலும் அவள் ஒரு P.G யிலுமாக அடைக்கலம் புகுந்தோம் . எங்கள் செட்டிலுள்ள 27 பெண்களில் வேலை தேடி கிளம்பிய 8 பேரில் அவளும் ஒருத்தி.

 

சென்னையின் பரபரப்பும், சினிமா தியேட்டர்களும் என்னைக் கவர்ந்திழுக்க விளையாட்டாய் பொழுதைப் போக்கிக் கொண்டிருந்த வேளைகளில், அவள் ஏதேதொ கம்பெனி இண்டர்வியூக்கு போய் விட்டு வந்து அப்படி இப்படி என்று சொல்லுவாள்.

சில சமயம் அவள் பெரிய கம்பெனி என்று சொல்லிய ஒரு சில கம்பெனியின் பெயர்களை நான் அப்போதுதான் முதன் முதலாய் கேள்விப்படுவேன். அவளிடம் பேசிக் கொண்டிருக்கும் வேளைகளில், இனிமேல் ரொம்ப தீவிரமாய் இவளைப் போல வேலை தேட வேண்டும் என்று நினைத்துக் கொள்வேன்.

ஆனால் பேசி முடித்து விட்டு, ரூமுக்கு வந்து நண்பர்களுடன் அரட்டை அடிக்க ஆரம்பித்ததும், எல்லாவற்றையும் மறந்து “நாளைக்கு” என்று தள்ளிப் போட்டு விடுவேன். இந்த “நாளைக்கு“ என்ற வார்த்தை என் வாழ்வில் ஏற்படுத்திய பாதிப்புகளை பின்னாளில்தான் நான் புரிந்துக் கொண்டேன்.

நான் பார்த்துக் கொண்டிருக்கும் போதே ஏதேதோ முயற்சி செய்து அவள் ஒரு பெரிய S/W கம்பெனியில் வேலைக்கும் சேர்ந்து விட்டாள். தன்னுடைய செலவுகள் போக வீட்டிற்கு மாதம் 10,000 ரூபாய் அவள் அனுப்பிக் கொண்டிருந்த வேளையில், நான் செகண்ட் ஷோ படம் பார்த்து விட்டு “நல்ல கதை மச்சி. கெடுத்துட்டான். ஃபோட்டொகிராஃபி யும், எடிட்டிங்கும் இல்லைன்னா படம் ரொம்ப சொதப்பி இருக்கும்” என்று நள்ளிரவு 2 மணிக்கு நண்பர்களுடன் விவாதித்துக் கொண்டிருந்தேன்.

அப்புறம் கூட இருப்பவர்கள் ஒவ்வொருவராய் மெல்ல செட்டிலாக ஆரம்பிக்க, நிஜமாலுமே எதிர்காலத்தின் மேல் ஒரு பயம் வந்து MNC யாவது மண்ணாவது, எக்ஸ்பீரியன்ஸ் தான் முக்கியம்னு ஏதோ ஒன்றில் உள்ளே நுழைந்து, முட்டி, மோதி, வதை பட்டு, மெல்ல உயர்ந்து இதோ இப்போது நானும் Well settled S/E இஞ்சினீயர்.

இடைப்பட்ட இந்த மூன்று வருடங்களில் எவ்வளவோ மாற்றங்கள். திடீரென்று ஒரு நாள் வீட்டில எனக்கு ரொம்ப சீரியஸா மாப்ளை பார்க்கிறாங்கடா. நான் கல்யாணத்துக்கப்புறமும் வேலைக்கு போவேன்னு சொல்லி இருக்கேன். ஆனா அப்பா பார்க்கலாம்மா ன்னு சொல்லி இருக்காரு என்று சொன்னாள்.

அடுத்த இரண்டு மாதங்கள் நாங்கள் பார்க்கும் போதெல்லாம் அவளுக்கு வந்திருக்கும் வரன்களைப் பற்றிதான் பேசிக் கொள்ளுவோம். ஒரு நாள் இரவு 12 மணிக்கு போன் செய்து ஒரு வரன் ஃபிக்ஸ் பண்ணி இருக்கங்கடா.

மாப்ளை பேரு கார்த்திக். ஈரோட்டில்யே பிஸினஸ் பண்றாரு. நல்லா செட்டில் ஆன குடும்பம். இதை விட்டா வேற நல்ல சம்பந்தம் கிடைக்காதுன்னு அம்மாவும், அப்பாவும் ரொம்ப கம்பெல் பண்றாங்க. மாப்ளையும் பார்க்க நல்லா இருக்காரு. எனக்கும் பிடிச்சிருக்கு. வேலையை விடணுமேன்னுதான் ரொம்ப யோசிக்கறேன். என்று சொன்னாள்.

இது நடந்த மூன்றாவது மாதத்தின் கடைசியில், கார்த்திக்கின் கையால், தனது கழுத்தில் தாலி கட்டிக் கொண்டாள். அவள் அப்போது ரொம்ப சந்தோஷமாக இருந்தாள் என்பதை அவள் கண்கள் எனக்கு சொல்லியது.

ஒரு நல்ல தோழி இல்லாத சென்னை வாழ்க்கைக்கு மெல்ல என்னை நான் பழக்கப் படுத்திக் கொண்ட வேளையில் ஆன்சைட் போகும் வாய்ப்பு ஒன்று தேடி வர, மூன்று வருடங்கள் தொடர்ச்சியாக இந்தியா வராமல், மிடில் ஈஸ்ட் நாடுகளிலும், அமெரிக்காவிலும் இருந்துவிட்டு இப்போதுதான் திரும்பி வருகிறேன்.

முதல் வேளையாக ஈரோடு போய் அவளது குடும்பத்தைப் பார்த்து விட்டு திரும்பி வந்துக் கொண்டிருக்கிறேன். ஒரு சுட்டிப் பாப்பா, அன்பான கணவன் என்று சந்தோஷமாய் அவள் வாழ்ந்து வந்தாலும், உள்ளே ஏதோ ஒன்று எனக்கு உறுத்திக் கொண்டிருக்கிறது.

நம்ம செட் ஆளுங்க வேற யாரு கூடயாவது கான்டாக்ட் இருக்கா?

இல்லைடா எங்க புள்ளைங்க எல்லாம் அப்படி அப்படியே கல்யாணம் குழந்தைன்னு செட்டிலாயிட்டாளுங்க. எல்லாருமே ரொம்ப பிஸியா இருக்காளுங்க. பசங்கள்ல கல்யாணத்துக்கப்புறம் நான் பேசிக்கிட்டிருக்கற ஒரே ஆளு நீ ஒருத்தன்தான். போன மாசம் கூட ஜீவா கோயம்புத்தூர்ல கல்யாணம்னு பத்திரிக்கை அனுப்பி இருந்தான். நான்தான் யாரு அவ்வளவு தூரம் போய்க்கிட்டுன்னு விட்டுட்டேன்.

அடிப்பாவி மெயில்லயாவது ஒரு கங்க்ராட்ஸ்னு மெசேஜ் அனுப்பி இருக்கலாமே?

எங்கடா வீட்டு வேலை செய்யறதுக்கே டைம் சரியா இருக்கு. குழந்தையை வேற பார்த்துக்கணும். மெயில் செக் பண்ணியே வருஷக் கணக்கு ஆவுது. மெயில் ஐ.டி எல்லாம் எப்பவோ காணாம போயிருக்கும்.

சரி சும்மாதான இருக்க. அவர்க்கு பிஸினஸ்ல ஹெல்ப் பண்ணிக்கிட்டு அவர் கூட அவரு ஆஃபிசுக்காவது போய்ட்டு வரலாமில்லை.

இல்லைடா. எங்க மாமியாருக்கு பிடிக்காது. அங்க எல்லாம் நீ எதுக்கும்மான்னு கேப்பாங்க. நானும் எதுக்கு தேவை இல்லாமன்னு விட்டுட்டேன்.

எங்களின் பலதரப்பட்ட சம்பாஷணைகளிற்கு நடுவே நான் கேட்ட இது போன்ற பல கேள்விகளிற்கு, அவள் கொடுத்த பதில்கள் என்னை இப்போது தூங்க விடாமல் செய்து கொண்டிருக்கிறது.

ஐந்து மணி நேரம் உட்கார்ந்து பேசிக் கொண்டிருந்த எங்கள் நட்பை சந்தேகிக்காத ஒரு கணவன், விட்டுப் பிரிய மனமில்லாதவாறு துரு துரு வென்றிருக்கும் ஒரு குழந்தை என்று அவள் சந்தோஷமாயிருந்தாலும், என்னை விட ரொமபவே அதிகமாய் இருக்கும் அவளது Logical Analysis உம், Programming Skills உம், Banking Domain Knowledge உம், எவரும் திட்டமிட்டுச் செய்யாமலேயே அவளது வீட்டின் சமையலறையோடு முடங்கிப் போய் விட்டதே என்ற ஆதங்கம் எனக்குள் போராட்டங்களை நடத்திக் கொண்டிருக்கிறது.

நான் செஞ்ச தக்காளி சட்னி சாப்பிட்டதே இல்லையே நீ? சாப்ட்டுப் பாரு. அவருக்கு ரொம்ம்ம்ம்பப் பிடிச்ச டிஷ் இது.

கணவன் மனைவி இருவரும் வற்புறுத்தி சாப்பிட வைத்த உணவின் சுவை இன்னமும் கொஞ்சம் நாக்கில் ஒட்டிக் கொண்டிருக்கிறது. காதுகளில் மட்டும் “நம்ம பேரை சொல்ற மாதிரி ஏதாவது சாதிக்கணும்டா” எனும் அவளது குரல் விடாமல் ஒலித்துக் கொண்டிருக்கிறது.

 



http://blog.nandhaonline.com/?p=26

 
< Prev   Next >

இந்த இதழில்..

தொகுப்பாளரின் மேசையிலிருந்து
ஹிந்து ஆசிரியர் என்.ராமின் பத்திரிக்கையாளர் முகமூடி...
*நட்சத்திரம்* : மொழி ஞாயிறு தேவ நேயப் பாவாணர் !
இந்திய கீரைக்கட்டு (சிறப்புக்கட்டுரை)
ஈழத்துத் தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல்
உள்ளது உள்ளபடி
எனிமி அட் ஹோம் + எலக்சன் அட் ஹோம் ?
ஒரு கணிப்பொறியாளனின் கனவு!!
ஓவியம் ஒன்று
கனவுகளைத் தொலைத்தவள்
கூடைக்குள் தேசம் -01
கூத்தணி ஆட்சி !
கேன்சருடன் ஒரு யுத்தம்
சிங்கப்பூரில் தமிழ் இல்லாத இடம்...
"இலங்கையில் இருக்கிறம்".
பட்டையை கிளப்பும் பாமக அரசியல் பரட்டை அரசியலா?
பரதேசி அரசியல் நடத்தும் பா.ம.க.
பூமி-- 1800 களில்: அமெரிக்க சிவப்பிந்தியத்தலைவரின் பார்வையில்
மென் துறையில் பெண்கள் உப்புக்குச் சப்பாணியா..?
மேமோகிராம்,எஃப்.என்.ஏ.சி.சோதனைகள்
ரஜினியின் வில்லன்கள் சிலரும் காசிமேடு ஆதியும் - எனது பார்வையில்
1996 டிசெம்பர்
வாசகர் எதிர்வினை
*நட்சத்திரம்* : புணரபி மரணம் ! (சிறுகதை)