இந்த வாரம்

முகப்பு
குழந்தைகள்
கலைக்கூடம்
இலக்கியம்
நிகழ்வுகள்
அரசியல்
அறிவியல்
துணுக்குகள்
சுற்றுலா
மெய்பேணல்
பொருளாதாரம்
விளையாட்டு
செய்தி விமர்சனம்
நிர்வாகம்
அசைபடங்கள்
மொழி
வாழ்க்கை
சமூகம்
இணையம்
போட்டிச் சந்தை Print E-mail
மா.சிவக்குமார்   

போட்டிச் சந்தையில் அரசு தலையிடக் கூடாது இன்று வைக்கப்படும் வாதங்கள் எல்லாம் பொருந்துவது விற்பவர்களும் வாங்குபவர்களும் பெருவாரியாக இருந்து எந்த ஒருவரும் சந்தை விலையை மாற்றி விட முடியாத ஒரு சில துறைகளில் மட்டுமே. காய்கறிகள்/பழங்கள், தனிமனிதர் சேவைகள் போன்ற சந்தைகளில் மட்டுமே இந்தக் கோட்பாடுகள் செல்லுபடியாகும்.


போட்டிச் சந்தை எப்படி இருக்கும்?


  • எண்ணற்ற விற்பனையாளர்கள் இருப்பதால் ஒவ்வொருவரும் தனது செலவுகளைக் குறைத்துக் கொண்டு எவ்வளவு முடியுமோ அவ்வளவு உற்பத்தி செய்வார்கள்.

  • ஒரு விற்பனையாளரின் உற்பத்தி கூடுவதாலோ குறைவதாலோ அவரைப் பொறுத்த வரை சந்தையின் தேவை மாறி விடப் போவதில்லை.

  • இப்படி எல்லோருமே அதிகம் உற்பத்தி செய்தால் விலை சரிந்து விடும் என்பது இருந்தாலும் அதைப் பற்றிக் கவலைப்படும் நிலையோ அதைப் புரிந்து கொள்ளும் திறனோ யாருக்கும் இருக்காது.

  • அதனால் தன்னிடம் இருக்கும் வளங்களைப் பயன்படுத்தி எவ்வளவு முடியுமோ அவ்வளவையும் உற்பத்தி செய்து சந்தைக்குக் கொண்டு வருவதுதான் விற்பனையாளருக்கு இருக்கும் ஒரே ஆதாயம் அதிகரிக்கும் வழி.

  • ஒவ்வொரு அலகு அதிக விற்பனையும் சந்தை விலையை ஈட்ட முடிவதால், அதை உற்பத்தி செய்ய ஆகும் செலவு விலையை விடக் குறைவாக இருக்கும் வரை உற்பத்தியை அதிகரித்துக் கொண்டே போகலாம்.

  • சந்தை விலையும் கடைசி அலகின் உற்பத்திச் செலவும் சமமாக இருக்கும் நிலையில்தான் ஒவ்வொரு விற்பனையாளரின் உற்பத்தியும் அமையும்.

இப்படி எல்லோரும் தன்னிச்சையாகச் செயல்படும் போது ஒரு சில உற்பத்தியாளர்களின் ஒரு அலகு உற்பத்தி செய்ய் ஆகும் செலவை
விட சந்தை விலை சரிந்து விட்டால், அவர்கள் தமது உற்பத்தியை நிறுத்தி இழப்பை தவிர்ப்பார்கள். விற்கும் விலை அளவைப் பொறுத்து மாறும் செலவுகளை மட்டுமாவது சரிக்கட்டுவது வரை உற்பத்தியும் விற்பனையும் தொடரலாம். அந்தப் புள்ளிக்குப் பிறகு தொழிலை விட்டு விடுவதுதான் இழப்பைத் தவிர்க்கும் ஒரே வழி.

  • உற்பத்தி அளவைப் பொறுத்து மாறாத செலவுகள் முழுமையாக ஈடு கட்டப்படா விட்டாலும் ஒரு விற்பனையாளர் தொடர்ந்து தொழில் செய்யலாம். மாறாச் செலவுகளில் ஒரு பகுதியாவது தேறினால் இழப்பில் கூட விற்பனை நடக்கும். இது உடனடிக் காலத்தில்.

  • இப்படியே பல நாட்கள் போனால் மாறாச் செலவுகளையும் குறைக்க முயற்சிகள் செய்து விற்பனையை நிறுத்தி விடுவார்.

 

குறுகிய காலத்தில் விலை மாறினாலும் சந்தைக்கு வரும் பொருட்களின் அளவு சரியான வீதத்தில் மாறி விடுவதில்லை. மாறாச் செலவுகளையும் மாற்ற முடியும் நீண்ட காலப் போக்கில்தான் விலை மாற்றத்தின் முழுத் தாக்கமும் நடைமுறைக்கு வரும்.

 

http://masivakumar.blogspot.com/2006/09/economics-20.html 

 
< Prev   Next >

இந்த இதழில்..

தொகுப்பாளரின் மேசையிலிருந்து
ஹிந்து ஆசிரியர் என்.ராமின் பத்திரிக்கையாளர் முகமூடி...
*நட்சத்திரம்* : மொழி ஞாயிறு தேவ நேயப் பாவாணர் !
இந்திய கீரைக்கட்டு (சிறப்புக்கட்டுரை)
ஈழத்துத் தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல்
உள்ளது உள்ளபடி
எனிமி அட் ஹோம் + எலக்சன் அட் ஹோம் ?
ஒரு கணிப்பொறியாளனின் கனவு!!
ஓவியம் ஒன்று
கனவுகளைத் தொலைத்தவள்
கூடைக்குள் தேசம் -01
கூத்தணி ஆட்சி !
கேன்சருடன் ஒரு யுத்தம்
சிங்கப்பூரில் தமிழ் இல்லாத இடம்...
"இலங்கையில் இருக்கிறம்".
பட்டையை கிளப்பும் பாமக அரசியல் பரட்டை அரசியலா?
பரதேசி அரசியல் நடத்தும் பா.ம.க.
பூமி-- 1800 களில்: அமெரிக்க சிவப்பிந்தியத்தலைவரின் பார்வையில்
மென் துறையில் பெண்கள் உப்புக்குச் சப்பாணியா..?
மேமோகிராம்,எஃப்.என்.ஏ.சி.சோதனைகள்
ரஜினியின் வில்லன்கள் சிலரும் காசிமேடு ஆதியும் - எனது பார்வையில்
1996 டிசெம்பர்
வாசகர் எதிர்வினை
*நட்சத்திரம்* : புணரபி மரணம் ! (சிறுகதை)