இணையம் மூலமாகச் சிறப்பான ஒரு தமிழ்க் கல்வியைக் கொடுக்க முடியும் என்பதை கொரோனா காலகட்டம் நமக்கு உணர்த்தியுள்ளது. அத்தகைய தமிழ்க் கல்வியைத் தொடர்ந்து வழங்கவே பூங்கா தமிழ்ப் பள்ளி தொடங்கப்பட்டது. எந்த இடத்திலிருந்தும் எளிமையாக, தொடர்ச்சியாக, தடையில்லாமல் நம் செம்மொழிக் கல்வியை “பூங்கா மெய்நிகர் தமிழ்ப் பள்ளி” வழங்கும்.