Poongaa School Manual
A quick introduction about Poongaa Tamil School
Admissions now open for academic year 2022-2023
எந்த இடத்திலிருந்தும் எளிமையாக, தொடர்ச்சியாக, தடையில்லாமல் தமிழ்க் கற்கும் வாய்ப்பினை பூங்கா மெய்நிகர் தமிழ்ப் பள்ளி வழங்குகிறது.
கணினி மூலம் எங்கிருந்தும் தமிழ்க் கற்கும் வாய்ப்பு
புதிய அணுகுமுறையில் தமிழ்மொழிக் கல்வி
குழந்தைகளின் மொழித் திறனை வளர்க்க மெய்நிகர் மொழிப் போட்டிகள்
மெய்நிகர் கலை நிகழ்ச்சிகள்
வேலை நிமித்தமாக பெற்றோர்கள் இடம் மாறும் சூழலில், குழந்தைகளின் தமிழ் மொழிக் கல்வி தடைபடும் நிலை பல நேரங்களில் நேர்ந்து விடுகிறது. புதிதாகச் செல்லும் இடங்களில் தமிழ்ப் பள்ளிகள் இல்லாமை, தமிழ்ப் பள்ளிகள் இருந்தாலும் புதிய பாடத்திட்டம் என தமிழ் மொழிக் கல்வி சார்ந்த சவால்களுக்கு விடை தரும் வகையில், பூங்கா தமிழ்ப் பள்ளி எந்த இடத்தில் இருந்தும் தொடர்ச்சியாக, தடையில்லாமல், சீராக தமிழ்க் கற்கும் வாய்ப்பினை வழங்குகிறது.
Poongaa Tamil School follows the American Institute of Tamil Language Syllabus, a Tamil Syllabus that focuses on the LSRW (Listen, Speak, Read, Write) skills in a structured methodology. This interactive Syllabus helps to Listen and speak Tamil faster than traditional methods.It’s a new approach to learn Tamil.
நான்கு வயது மாணவர்களுக்கு தமிழ் மொழியை அறிமுகப்படுத்தி, கேட்டல் மற்றும் மொழி பேசும் திறனை வளர்க்க மழலை வகுப்பு உதவுகிறது. அதிகளவில் பாடல்கள், கதைகள், உரையாடல்களை உள்ளடக்கியதாகவே பாடத்திட்டம் இருக்கும்.
கேட்டல், பேசுதல், வாசித்தல், எழுதுதல் ஆகிய மொழி சார்ந்த திறன்களை அறிமுகம் செய்யும் முதல் நிலையாக அடிப்படை நிலை – 1 இருக்கும். இந்த நிலையின் இறுதியில் மொழியைப் பேசவும், எழுத்துக்களை அறிந்து சிறு சொற்களை வாசிக்கவும் முடியும்.
அடிப்படை நிலை – 1 பயின்ற மாணவர்கள், நிலை 2 பயில முடியும். கேட்டல், பேசுதல், வாசித்தல், எழுதுதல் ஆகிய திறன்களை இந்த நிலையிலும் மாணவர்கள் தொடர்ந்து பெறுகிறார்கள்.
எழுத்துக்களை முழுமையாக அறிந்தப் பிறகு, சிறு வாக்கியங்களை அமைக்கவும், சரளமாகப் பேசவும், வாசிக்கவும் கூடிய நுட்பங்களை நிலை 3, 4, 5 போன்ற நிலைகள் வழங்குகின்றன. தொடர்ந்து அடிப்படைத் தமிழ் மொழித் திறன்களைப் பெற்றுச் சரளமாக உரையாடவும், வாசிக்கவும், எழுதவும் கூடிய திறன்களை மாணவர்கள் அடைகிறார்கள்.
பூங்கா தமிழ்ப் பள்ளியின் மாணவர் சேர்க்கை தற்பொழுது நடைபெற்று வருகிறது. முழுமையாக இணையம் மூலமாக மெய்நிகர் வகுப்புகளாக பூங்கா தமிழ்ப் பள்ளி செயல்படும். தமிழ்க் கல்வி தவிர, தமிழர் பண்பாட்டினை நம் குழந்தைகளுக்கு அறிமுகம் செய்யும் வகையில் தமிழர் பண்பாடு சார்ந்த கலைநிகழ்ச்சிகளும், …
The pandemic has shown us a new world of Virtual learning. During the pandemic, the whole world started learning virtually. From Kindergarteners to College students, virtual learning helped us continue …
Send an email or call us today for more details